வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Thursday, May 24, 2012

அறிவு - அருள் விளக்கங்கள் 8


அறிவு குறித்து அருட்தந்தயின்  அருள் விளக்கம்

அணுக்களின் நீண்டகாலத் தொடர்பியக்கப் பக்குவ பரிநாமத்தாலாகிய விந்துவை இடமாகப் பெற்று,இரத்த ஓட்டம் என்ற ரசாயனச் சுழல் ஊட்டத்தால் எழுச்சி பெறும் காந்த அலை இயக்கத்தின் மூலம் தனது உருவம் (அழுத்தம்) ஒளி, ஒலி, சுவை, மணம், இயக்கம் (மனம்) என்ற ஆறு வகைகளையும் புலன்களின் கூடுதல்களுக்கு ஏற்பவும்,யூக உயர்வுக்கு ஏற்பவும் பேராதார சக்தி (Eternal Power)  உணர்ந்துகொள்ளும் ஒரு சிறப்பியக்கமே அறிவாக உள்ளது.
விளக்கிலிருந்து வெளிச்சத்தைப் பிரித்துத் தனியாக எடுக்கமுடியாதது போல, மணியிலிருந்து ஓசையைப் பிரித்துத் தனியாக எடுக்க முடியாதது போல, உயிரை விட்டு அறிவைத் தனியே பிரித்து எடுக்க முடியாது

ஓசை இயக்கம் நின்றவுடன் மவுனமாகி விடுதல் போல, ஒளி இயக்கம் நின்றவுடன் இருளாகி விடுதல் போல, அறிவு இயக்கம் நின்றவுடன் அது ஆதி நிலையாகி விடுகின்றது
*************வாழ்க வளமுடன்*************

No comments:

Post a Comment