வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Tuesday, May 15, 2012

கருணைக் காட்டும் கடவுள் - அருள் விளக்கங்கள் 4

கருணைக் காட்டும் கடவுள் !

நாம் பலதரப்பட்ட துன்பம் ,துயரம் அச்சம் பயம் போன்ற துயரங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .உடல் ரீதியான துன்பம் ஒருபக்கம்,பொருள் இல்லையே என்ற பிரச்சனை ஒருப்பக்கம் ,குடும்ப பிரச்சனைகள் ஒருபக்கம் ,வெறு பல பிரச்சனைகள் மறுபக்கம் ,என எல்லாப் பக்கங்களில் இருந்தும் நெருக்கப் படும்போது என்ன செய்வது என்று தெரியாமால் திடிதுடித்துப் போகிறோம்.


நாம் படும் துன்பங்களையும், கவலைகளையும் யார் இடத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்று மனிதனை தேடுகிறோம் . யாரும் நமக்கு உதவி செயவதாக தெரியவில்லை என்று ஆண்டவரிடத்தில் விண்ணப்பம் செய்கிறோம் . ஆனால் எந்தக் கடவுள் நமக்கு உதவி செய்வார் என்பது நமக்குத் தெரியாமல், ஏதோ ஒரு கடவுளைத் தேடி நமது குறைகளை சொல்லி புலம்புகிறோம் . அந்த புலம்பல் எங்கே செல்கிறது என்பது நமக்குத் தெரியாது,

கண்களுக்கு தெரிந்த கடவுளை வணங்கி வழிபடுகிறோம். ஏதோ ஒரு வகையில் நம்முடைய துன்பம் துயரம் அச்சம் பயம் போன்ற கவலைகள் நம்மை விட்டு விலகி விடுகின்றன ,

நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் நிச்சயமாக ஒரு பின்னணி இருக்கும். காரணம் இல்லாமல் எந்த காரியம் நடைபெறாது.  போராட்டங்களும், பிரச்சனைகளும் வரும்போது , பொதுவாக அப்பாவால் வந்தது, அம்மாவால் வந்தது, கணவனால் வந்தது , மனைவியால் வந்தது, குழைந்தைகளால் வந்தது என்று பிறரைக் குற்றம் சாட்டி சொல்வது இயல்பான வாடிக்கையாகி விட்டது.

ஆனால் எல்லா மனிதர்களும் பிறக்கும் பொது நல்லவர்களே ! அவர்கள் வளர்ந்து வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு செயல்களும் நல்வினை , தீவினை என்னும் இரு வினைகளாக நம்முடைய ஆன்மாவில் பதிவாகி விடுகிறது , இதைத்தான்  கிரியை என்பார்கள் . மாயை என்பார்கள் , சாத்தான் என்பார்கள், சைத்தான் என்பார்கள், பிசாசு என்பார்கள்.

நல்லது செய்தால் நல்லது நடக்கும் , தீயது செய்தால் தீயது நடக்கும் என்பது பொது முறையாகும் . நன்மையையும் தீமையும் பிறர தர வாராது என்பது நாம் உணர வேண்டும் , ஆனால் நமக்கு நல்லது எது?தீயது எது ? என்பதே தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ,

பிற உயிர்களின் உழைப்பால் உணர்வால் கண்ணீரால் எதுவரினும் அது தீமைகளையே தரும் அதுவே தீவினையாகும் ,

பிற உயிர்களின் அன்பால் தயவால் கருணையால் மகிழ்ச்சியால் எது வரினும் அது நன்மைகளையே தரும், அதுவே நல்வினையாகும், இதை புரிந்து கொண்டு வாழ்ந்தால் நமக்கு எக்காலத்திலும் துன்பம் துயரம அச்சம், பயம் போன்ற கவலைகள் வாராது,

கடவுளின் கருணை !

நாம் துன்பங்களை போக்க எதோ ஒரு கடவுளை வணங்குகிறோம், துன்பங்கள் போய் விடுகிறது என்பதை மேலே சொன்னோம் . அதன் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் .

நாம் வணங்கும் கடவுள் அத்தனையும் தத்துவங்களே ஒழிய உண்மை கடவுள்கள் அல்ல ! நாம் வணங்கும் கடவுள் அனைத்தும் மாயையின் வடிவங்களே யாகும் . நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் குற்றங்களை அந்த தத்துவங்களின் உருவங்களின் முன் விண்ணப்பம் செய்து வழிபடுகிறோம். அதை உருவங்கள் கவனிப்பதும் இல்லை ஏற்றுக் கொள்வதும் இல்லை. உங்கள் எண்ணங்களும் செயல்களும் நம்மைப் படைத்த மெய்ப் பொருளான அருட்பெரும் ஜோதியான  உண்மைக் கடவுளுக்குப் போய் சேருகின்றன .

எங்கு எங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும்
அங்கு அங்கு இருந்து அருளும் அருட்பெரும் ஜோதி !

எப்படி எண்ணிய என் கருத்து இங்கு எனக்கு
அப்படி அருளிய அருட்பெரும் ஜோதி !

எத்தகை விழைந்தன என்மனம் இங்கு எனக்கு
அத்தகை அருளிய அருட்பெரும்ஜோதி !

என்பார் வள்ளலார் அவர்கள் .

அந்த அருட்பெரும் ஜோதியின் கருணையால் அருளால் நம்முடைய துன்பங்கள் யாவும் தீர்த்து வைக்கப் படுகின்றன , ஏன் என்றால் .

இவ்வளவு பெரிய உலகத்தை உண்டாக்கிய சர்வ வல்லபராகிய தனித்தலைமைக் கடவுள்தான் உயிர்களையும் படைத்தவராகும் . அதனால் உயிர்களுக்கு வரும் இடையூறுகள் எல்லாம் விளக்கக் கூடிய , அன்பு,தயவு,கருணை யாவும் அருட்பெரும்ஜோதிக் கடவுளையே சார்ந்ததாகும் . நாம் அனைவரும் அவருடைய குழைந்தைகள் என்பது நமக்குத் தெரியாவிட்டாலும் அவருக்குத் தெரியும் .

தாயாகித் தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் தன்னை நிகர் இல்லாத தனித் தலைமை தெய்வம் .எல்லாம் செய் வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம் , என்னுயிறிர் கலந்து எனக்கே இன்பம் நல்கும் தெய்வம் என்று வள்ளலார் நமக்கு உண்மைக கடவுளான அருட்பெரும்ஜோதி கடவுளை இந்த உலகத்திற்கு அறிமுகப் படுத்தி உள்ளார் .

நாம் இறைவனிடம் வேண்டும் போது,

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே !

பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
பகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்.

அப்பா நான் பற்பல கால் அறைவது என்னே அடியேன்
அச்சம் எல்லாம் துன்பம் எல்லாம் மறுத்து விரைந்து வந்தே
இப்பாரில் இது தருணம் என்னை அடைந்து அருளி
எண்ணம எல்லாம் முடித்து என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் .

மேலே கண்டபடி உண்மையான அன்பினால் இறைவனை நினைத்து--நினைந்து நினைந்து,உணர்ந்து உணர்ந்து ,நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து,ஊற்று எழும் கண்ணீரால், வேண்டவேண்டும் வழிபட வேண்டும்.அப்போதுதான் இறைவன் கருணைக் காட்டுவார்

உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனுடைய குழந்தைகளாகும் அதனால் உலகில் உள்ள எந்த உயிர்களுக்கும் துன்பம் செய்யாமல் அன்பு செலுத்த வேண்டும் .அதனால் தான் உயிர்க் கொலை செய்ய வேண்டாம் புலால் உண்ண வேண்டாம் என்று மிகவும் வலியுறுத்தி சொல்லி உள்ளார் வள்ளலார் .

ஆன்மநேய அன்பர்களே ! மாயையால் உருவாக்கிய பொய்யான தத்துவ உருவங்களை வழிபடாமல் உண்மையான கடவுளாகிய உருவம் அற்ற அருட்பெரும் ஜோதிக் கடவுளை வழிபடுவோம் . அவர் ஒருத்தர் மட்டும்தான் தனிப்பெரும் கருணை உடையவர் . அவரால் மட்டுமே உயிர்கள் மேல் அன்பு, தயவு, கருணைக் காட்ட முடியும் . இதுவே சத்தியமான உண்மையாகும் . 


"புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் 
நீவீர் எல்லாம் புனிதம் உரும் பொருட்டே "
என்பது வள்ளலார் வாக்காகும் .

நன்மை செய்வோம் நலம் பெறுவோம்
கொல்லா நெறியே குவலயம் ஓங்குக
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

No comments:

Post a Comment