வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Wednesday, May 27, 2015

அருள் விளக்கங்கள்                                                        





{ நமக்குள் உள்ள 6 ஆதாரங்கள் பற்றி சித்தர்களால் உலகுக்கு அளிக்க பட்ட உண்மைகளும் அவற்றின் கட்டமைப்புகளும் . }
குண்டலினி - மூலாதாரம்.
------------------------------------------
மூலாதாரம் என்பது கருவாய்க்கும்,
எருவாய்க்கும் இடையே இருப்பதாக முன்னரே
பார்த்தோம். சித்தர்கள் இந்த மூலாதாரத்தின்
இடத்தினை மிகத் தெளிவாக
விளக்கியிருக்கின்றனர்.
திருமூலர் தனது திருமந்திரத்தில் பின்
வருமாறு விளக்குகிறார்....
நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
கூவிக் கொண்டு ஈசன் குடியிருந்தானே
- திருமூலர்.
போகரும் தனது போகர் ஏழாயிரம் நூலில் பின்
வருமாறு விளக்குகிறார்...
அகாரத்தின் மேலாகக் கணேசர் நிற்பார்
அதிலே யோர்கோணத் திலுகாரம் நிற்கும்
உகாரத்தில் வல்லபையாம் சக்தி நிற்பாள்
ஒடுங்கிய தோர்முனை யொன்றில்
கதலிப்பூவாய்
புகாரமாய் முகங்கீழ்க் குண்டலியாம் சக்தி
பெண்பாம்பு போல்சுருட்டிச் சீறிக் கொண்டு
சுகாரமாய்ச் சுழிமுனையூ டுருவி நிற்பாள்
துரியாதீ தம்மென்ற வவத்தை தானே
- போகர்.
மூலாதாரச் சக்கரமானது பிறப்பு
உறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட
பகுதியில் உள்ளது. அது இடை, பிங்கலை,
சுழுமுனை என்கிற மூன்று நாடிகள் சேரும்
இடத்தில் உள்ளது. இன்னும் துல்லியமாக
சொல்வதானால் ஆசனத்திற்கு இரண்டு
விரற்கிடை மேலும், பிறப்பு உறுப்புக்கு இரு
விரற்கிடை கீழும் உள்ள நான்கு விரற்கிடை
அளவுள்ள இடத்திலேயே மூலாதார சக்கரம்
இருக்கின்றது.
உடலில் இருக்கும் மற்றச் சக்கரங்களைத்
தாங்குவதால் இதனை ஆதார சக்கரம்
என்கின்றனர். அதாவது மற்றச் சக்கரங்களுக்கு
தேவையான சக்தியைத் தரக் கூடிய
குண்டலினி இச்சக்கரத்தில் தான் சுருண்டு
படுத்துள்ளது. இச்சக்கரத்தில் இருந்து நான்கு
முக்கிய நாடிகள் வெளிக் கிளம்புகின்றன.
அவை தாமரையின் நான்கு இதழ்கள் போல்
தோற்றமளிக்கும். ஒவ்வொரு நாடியின்
அசைவினால் ஏற்படும் சப்தங்கள் "வ ஸ ச
ஷ" என்ற எழுத்துக்களால்
குறிக்கப்படுகின்றன.
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
மூலாதார சக்கரத்தின் மாதிரி படம் இது.
இந்த நான்கு எழுத்துக்களும் முறையே மனம்,
புத்தி, சித்தம், அகங்காரம் குறிக்கிறது
என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.
இச்சகக்கரத்தின் மத்தியிலுள்ள யோனிக்கு
“காமம்”என்று பெயர். அதையே சித்தர்கள்
தொழுகிறார்கள். இங்குதான் குண்டலினி
தூங்குவது போல் அசைவற்றுக் கிடக்கிறது.
இச்சக்கரத்தின் அதிதேவன் வினாயகர்,
அதிதேவதை டாகினி/தாகினி என்று
குறிப்பிடப்படுகிறது. இந்த மூலாதார
சக்கரத்தின் பீஜ மந்திரமாக "லம்" என்பது
குறிப்பிடப்படுகின்றது.
பஞ்சபூதங்களில் ஒன்றான பூமி இந்த்
சக்கரத்தின் மூலக்கூறாக கூறப் படுகிறது.
சிறுநீரகம் தொடர்புடைய உறுப்பாக
கூறப்படுகிறது.
குருவருளின் துனையோடும்,
வழிகாட்டுதலோடும் தனிமையான இடத்தில்
அமர்ந்து மூலாதார சக்கரத்தை மனதில்
நிறுத்தி மூல மந்திரத்தை உருவேற்றிட
குண்டலினி விழித்துக் கொள்ளும். இதனை
தன் உணர்வுகளால் மட்டுமே அறிய
முடியும். மூலாதாரத்தில் வெப்பம்
உருவாவது, மூலாதாரத்தில் பரபரவென
எதோவொன்று ஊறும் உணர்வு, உடல்
புல்லரித்தல் போன்ற அனுபவங்களை நான்
உணர்ந்திருக்கிறேன்.
குண்டலினி விழித்துக் கொண்டவர்களுக்கு
கடுமையான பசியும், அதிக தூக்கமும்
உண்டாகும்.
குண்டலினி - சுவாதிஷ்டானம்.
-----------------------------------------------
குண்டலினி பயிற்சியில் இரண்டாவது சக்தி
ஆதார மையமான சுவாதிஷ்டானம் பற்றி
இன்று பார்ப்போம். இதற்கு “நிராகுலம்”
என்றொரு பெயரும் உண்டு. நிராகுலம்
என்றால் துன்பமற்று ஞானமயமாக இருப்பது
என பொருள்படும்.
மூலாதாரத்திற்கு மேலே இருக்கும்
இரண்டாவது சக்கரம் சுவாதிஷ்டானம். நமது
பிறப்பு உறுப்பிற்கு மேலே இது
இருக்கிறதாம். அதாவது மூலாதார சக்கரத்தில்
இருந்து நான்கு விரற்கடை அளவு மேலே
இருப்பதாக கூறியிருக்கின்றனர். இந்த
சக்கரமானது பஞ்சாட்சர எழுத்துக்களான
"சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான
"ந" என்னும் எழுத்தையும்,அதன்
தத்துவத்தையும் விளக்குவதாக
அமைகின்றது.
இச்சக்கரத்தினின்று ஆறுமுக்கிய நாடிகள்
வெளிக் கிளம்புகின்றன. அவை தாமரையின்
ஆறு இதழ்கள் போல் உருவகப் படுத்தி
இருக்கின்றனர். ஒவ்வொரு நாடியின்
அசைவினால் ஏற்படும் சப்தங்கள் "ஸ, ஹ, ம்,
ய, ர, ல" என்ற எழுத்துக்களால்
குறிக்கப்படுகின்றன. இதன் மையத்தில்
வளைந்த பிறைச் சந்திரன் ஒன்றும் குறிக்கப்
படுகிறது.
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
சுவாதிஷ்டான சக்கரத்தின் மாதிரி படம் இது.
சுவாதிஷ்டானத்தின் அதிதேவன் பிரம்ம
தேவர். அதிதேவதை ராகிணி/சாகிணி. பஞ்ச
பூதங்களில் ஒன்றான நீர் இதன் மூலக் கூறாக
கூறப்பட்டிருக்கிறது. சுவாதிஷ்டானமானது
நமது பிறப்பு உறுப்புகள், கருப்பை, குடல்
ஆகிய உறுப்புகளுக்கு தொடர்புடையதாம்.
சுவாதிஷ்டானத்திற்கான மூல மந்திரம் “வம்”
என்பதாகும். சுவாதிஷ்டானத்தை மனதில்
இருத்தி மூலமந்திரத்தை உருவேற்றி வர
குண்டலினி இந்த மையத்தை அடையும். இது
விடாத தொடர் முயற்சி மற்றும்
பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.
சித்தர்கள் இந்த சக்கரங்கள் ஒவ்வொன்றையும்
ஆணின் அம்சமாகவே கூறியிருக்கின்றனர்.
குண்டலினி சக்தியை பெண் அம்சமாக
அதாவது வாலையின் அம்சமாய்
உருவகிக்ன்றனர். இந்த சக்கரத்தின் வழியே
குண்டலினி சக்தி பாயும் போது அவை
பூரணத்துவம் அடைந்து மலர்வதே
சித்தியடைதல் எனப் படுகிறது.
இந்த சக்கரம் மலர்வதால் நமது சுய
கட்டுப்பாட்டின் தீவிரம் தூண்டப் பட்டு
விழிப்புணர்வு நிலை மிளிரும். நமது
எண்ணம், செயல், சிந்தனை சார்ந்த
விஷயங்களின் மீதான மேம்பட்ட
பிடிப்புணர்வுக்கு இந்த சக்கரம் தூண்டப்
படுவது அவசியமாகிறது.
குண்டலினி - மணிபூரகச் சக்கரம்.
---------------------------------------------------
மூன்றாவது சக்தி ஆதார மையமான
மணிப்பூரக சக்கரம் பற்றி இன்று பார்ப்போம்.
தாயின் வயிற்றில் இருந்து பிறந்த உடன்
நம்முடைய உடலில் ஒரு முடிச்சு இடப்
படுகிறது. அது தொப்புள் கொடியாகும்.
இந்த உடல் உருவாகி, உயிராகத் தேவையான
பிராணன் இந்த கொடியின் வழியேதான்
நமக்குள் அடைக்கப் படுகிறது என சித்தர்
பெருமக்கள் கூறுகின்றனர். இவ்வாறு
அடைக்கப் பட்ட பிராணன் தொப்புளைச் சுற்றி
குடி கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றனர்.
இந்த சக்தி மையத்தையே நாம் மணிப்பூரகம்
என்கிறோம். இது சுழிமுனை நாடியில்
அமைந்திருக்கிறது. இது நமது வயிறு,
சிறுகுடல், மண்ணீரல், கல்லீரல் போன்ற
உறுப்புகளுடன் தொடர்புடையதாக கூறப்
படுகிறது. இதன் மூலக்கூறு நெருப்பு
ஆகும். மணிப்பூரகத்தில் தகித்துக்
கொண்டிருக்கும் இந்த நெருப்பு மங்கி
அணையும் போதுதான் நம் உடல் நோய்வாய்ப்
பட்டு பலவீனம் அடைந்து பின்னர் உயிர்
பிரிவதாகவும் ஒரு கருத்தாக்கம்
கூறப்பட்டிருக்கிறது.
இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற
பத்து யோக நாடிகள் கிளம்புகின்றன. இதன்
அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை டட,
ணத, தத, தந, பப என்ற எழுத்துக்களால்
குறிப்பிடுகின்றனர். மணிப்பூரகத்தின்
அதிதேவன் விஷ்ணு, அதிதேவதை லக்குமி/
லாகிணி. இதற்கான மூல மந்திரம் “ரம்”
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
மணிபூரகச் சக்கரத்தின் மாதிரி படம் இது.
மணிப்பூரக சக்கரத்தின் நடுவே முக்கோண
வடிவம் ஒன்று உள்ளது. இது நெருப்பினை
அடையாளப் படுத்துகிறது. இந்த
சக்கரமானது “சிவயநம” என்னும்
எழுத்துக்களில் ஒன்றான “ம்” என்பதன்
தத்துவத்தை விளக்குவதாக
அமைந்திருக்கிறது.
மணிப்பூரகத்தை மனதில் இருத்தி, இதன்
மூல மந்திரத்தினை உருவேற்ற
சுவாதிஷ்டானத்திலிருந்து
குண்டலினியானது எழும்பி மணிப்பூரகத்தை
வந்தடையுமாம். இது மிகக் கடுமையான
பயிற்சி மற்றும் முயற்சியினால் மட்டுமே
சாத்தியமாகும்.
முறையான பயிற்சி மற்றும் அனுபவம்
வாய்ந்த குருவின் வழிகாட்டுதல்
இல்லையெனில் இந்த நிலையை தாண்டுவது
மிகக் கடினம். ஏனெனில் முறையற்ற பயிற்சி
உடலில் தேவையற்ற பக்க விளைவுகளை
உருவாக்கிடும். இதை என்னுடைய சொந்த
அனுபவத்திலும் உணர்ந்திருக்கிறேன். எனவே
தக்க வழிகாட்டுதலுடன் பயில
வேண்டுகிறேன். இதனை ஒரு எச்சரிக்கையாக
எடுத்துக் கொண்டாலும் சரிதான்.
முறையாக பயிற்சி செய்து
சுவாதிஷ்டானத்தில் மலர்ந்திருக்கும்
குண்டலினி மணிப்பூரகத்தை அடைந்தால்,
நமது உயிர் சக்தி தூண்டப் பட்டு உடலின்
உறுதி மற்றும் உடல் நலம் மேம்படும்.
இத்தகைய சக்கரம் தூண்டப் பட்டவர்கள்
கடுமையான உழைப்புக்கும்
அஞ்சாதவர்களாய் மாறிவிடுவர்.
குண்டலினி - அனாகதம்.
---------------------------------------
நமது உடலில் இருக்கும் நான்காவது ஆதார
சக்கரமான அனாகதம் பற்றி இன்று பார்ப்போம்.
அநாகதம் என்றால் உருவமற்ற அல்லது
உருவகிக்க இயலாத ஒலி என்பதாகும்.
இந்த ஆதார மையமானது நமது கழுத்திற்கு
கீழே இதயத்திற்கும், நுரையீரலுக்கும்
நடுவில் சுழிமுனை நாடியில்
அமைந்திருக்கிறது.
இதனை அகத்தியர்
பின்வருமாறு விளக்குகிறார்.
பாரப்பா பூரகத்தின் மேலேகேளு
பாடுகிறோ மெட்டங்குலந்தா
னனாகததின்வீடு
தேர்ந்தயிதழ் பன்னிரெண்டாய் சுற்றிநிக்கும்
ஏரப்பா தேயுவது யிருப்பிடமாய் நிற்க்கும்
பிருப்பிடத்தில் சிகாரமென்ற எழுத்தாமே
எழுத்தான பூதமதின் பீஜங் கேளு
இயம்புவேன் யமதுவும் மிடமேயாகும்
செத்தான அவ்வெழுத்தில்
ருத்ரன்காகினிதானே.
-அகத்தியர்.
இந்த அனாகத சக்கரம் இதயத்தோடு
தொடர்புடையதாக கூறப் படுகிறது. இதன்
மூலக்கூறு காற்று. அதிதேவன் ருத்ரன்,
அதிதேவதை காகினி. இதன் மூல மந்திரம்
“யம்” என்பதாகும். இந்த சக்கரமானது
பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம"
என்னும் எழுத்துகளில் ஒன்றான "சி" என்னும்
எழுத்தையும் அதன் தத்துவத்தையும்
விளக்குவதாக அமைகின்றது.
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
அனாகதச் சக்கரத்தின் மாதிரி படம் இது.
இந்த சக்கரத்தில் இருந்து பன்னிரெண்டு யோக
நாடிகள் தாமரை இதழ் போல வெளிக்
கிளம்புகின்றன. இவற்றின் அசைவுகளால்
உண்டாகும் சப்தங்களை சித்தர் பெருமக்கள்
பின் வரும் எழுத்துக்களால் குறிக்கின்றனர்.
அவை சங, கக, கக, டட, ஞஜ, ஜச என்பதாகும்.
சக்கரத்தின் மையத்தில் சப்த பிரம்மத்தின்
நாதமான, அனாகத சப்தம் கேட்கும்.
அனாகத சக்கர இடத்தை மனதில் இருத்தி
மூல மந்திரத்தை தொடர்ந்து உருவேற்றி வர
மணிப்புரக சக்கரத்திலிருந்து குண்டலினி
எழும்பி, அனாகதம் வந்தடையும். இந்த சித்தி
சில நாட்களிலும் வாய்க்கும், சமயங்களில்
சில வருடங்கள் கூட ஆகலாம். இது முழுக்க
சாதகனின் பொறுமை மற்றும் கவனக்
குவிப்பை பொறுத்தது.
மூலாதார சக்கரத்தில் இருந்து எழுப்பப் பட்ட
குண்டலினியானது அனாகத சக்கரத்தை
வந்தடையும் போது அதற்கு “அக்கினி
குண்டலினி” என்று பெயராகிறது. இப்படி
அனாகத சக்கரம் மலர்ந்த நிலையில்,
சாதகனின் உள்ளத்தில் கருணை, அன்பு,
இரக்கம் போன்ற சாத்வீக குணங்கள்
மேம்படும். படைப்பாற்றலின் ரகசியமும்
புரியவரும்.
குண்டலினி - விசுத்தி.
--------------------------------
மூலாதாரத்திலிருந்து ஐந்தாவது சக்கரமான
விசுத்தி பற்றி இன்று பார்ப்போம்.
இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.
ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம்
அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு
மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம்
பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும்
பாலகனே அட்சரந்தான் வகாரமாகும்
வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே.
- அகத்தியர்.
இந்த சக்தி ஆதார மையமானது நமது
தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை
நாடியில் அமைந்து இருப்பதாக
குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை,
மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள்,
நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன்
விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக
குறிப்பிடப் படுகிறது.
பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம"
என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும்
எழுத்தையும், அதன் தத்துவத்தையும்
விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது.
இச்சக்கரத்தின் அதிதேவன் சதாசிவன், அதி
தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான
ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூல
மந்திரம் “ஹம்” எனப்படுகிறது.
இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற
பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன.
அவற்றின் அசைவுகளால் ஏற்படும்
சப்தங்களை லுரூ, ருஊ, வஈ, இஆ, அஅ,
அம்ஔ, ஓஐ, ஏலூ என்ற எழுத்துக்களால்
குறிக்கப்படுகின்றன. இந்த தாமரை இதழ்களின்
எண்ணிக்கையில் ஒரு சூட்சுமம் அடங்கி
இருக்கிறது. இந்த தொடரின் முடிவில் அது
என்ன என்பதை பகிர்ந்து கொள்கிறேன்.
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
விசுத்திச் சக்கரத்தின் மாதிரி படம் இது.
இந்த சக்கர இடத்தை மனதில் நிறுத்தி, மூல
மந்திரத்தினை உருவேற்றி வர அனாகத
சக்கரத்தில் நிலை கொண்டிருக்கும் அக்கினி
குண்டலினியானது மேலெழும்பி விசுத்தி
சக்கரம் வந்தடையும். இந்த தியானத்தினை
“ஆகாச தாரணை” என்கின்றனர் சித்தர்
பெருமக்கள்.
இந்த சக்கரம் மலர்வதன் மூலம் தீமையை
உருவாக்கும் அல்லது விளைவிக்கும்
எண்ணங்கள், உணர்வுகள் எல்லாம் சாதகனை
விட்டு நீங்கிடும். இதனால் எதனையும்
விருப்பு வெறுப்போ அல்லது பற்றுதலோ
இல்லாது சாட்சி நிலையில் இருந்து கவனிக்க
முடியும். நான் என்கிற அகந்தை அழிந்து
அன்பும், கருணையும் மிளிர்ந்தவனாகிடுவான்
என்கின்றனர்.
இதுவரை நாம் பார்த்த இந்த ஐந்து
சக்கரங்களும் ஆகாச தத்துவ ஞானம் என்ற
வகையில் அடங்கும். இதற்குமேல் வரும்
மற்ற இரண்டு சக்கரங்களும் மனஸ தத்துவ
வகையை சார்ந்தவை.
குண்டலினி - ஆக்ஞா.
----------------------------------
மூலாதாரத்திலிருந்து ஆறாவது சக்தி ஆதார
மையமாய் குறிக்கப்படும் ஆக்ஞா சக்கரம்
பற்றி இன்று பார்ப்போம்.
இதனை அகத்தியர்
பின்வருமாறு விளக்குகிறார்.
ஆள்வாயே யாதாரஞ் சொச்சங்கேளு
அருளினோம் விசுத்தி யாக்கினையைகேளு
பாள்வாயே இதற்க்குமேல்
பதினாறங்குலந்தான்
பாலகனே கண்டமார் புருவமாகும்
மாள்வாயே மளவாகி யளவாக்லோங்கி
மகத்தான யிரண்டிதளாய் பிரிந்தே நிற்கும்
யேள்வாயே வட்சரந்தான் னிரண்டதாகும்
இதனடுவில் யகார மாக்கினை வீடாமே.
- அகத்தியர்.
இந்த சக்கரம் நமது புருவ மத்திக்கு நேராக
மூளையில் அமைந்திருப்பதாக குறிப்பிடப்
படுகிறது. இன்னும் சரியாக சொல்வதெனில்
நமது நெற்றியில் உள்ள பள்ள முடிச்சுக்கு
இனையாக இருக்கிறது. இதற்குத் 'திரிகூடம்"
என்றும் பெயர். இந்த ஆக்ஞா சக்கரமும் மற்ற
சக்கரங்களைப் போல சுழுமுனை நாடியில்
அமைந்துள்ளது.
பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம"
என்னும் எழுத்துகளில் ஒன்றான "ய" என்னும்
எழுத்தையும் அதன் தத்துவத்தையும்
விளக்குவதாக இது அமைகின்றது. இதன்
மூலக்கூறு நெருப்பு. கண்கள், நெற்றி
போன்றவை தொடர்புடைய உறுப்புகளாகும்.
அக்ஞா சக்கரத்தில் இரண்டு தாமரை
இதழ்களை போல் இருபக்கமும் எதிரெதிரே
இரண்டு யோக நாடிகள் உள்ளன. இவற்றை
சூரிய சந்திர அம்சமாக உருவகம்
செய்திருக்கின்றனர். இதன் அசைவுகளால்
ஏற்படும் சப்தங்களை ஹ, ள என்ற
எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
ஆக்ஞா சக்கரத்தின் மாதிரி படம் இது.
இந்த சக்கரத்தின் அதிதேவன் பரமசிவன், அதி
தேவதை வாகினி. மூல மந்திரம் "ஓம்".
அக்ஞா சக்கர இடத்தை மனதில் நிறுத்தி, மூல
மந்திரத்தை உருவேற்றி வர விசுத்தி
சக்கரத்தில் இருக்கும் குண்டலினியானது
மேலேறி அக்ஞா சக்கரத்தை வந்தடையும்.
ஆக்ஞா சக்கரம் மலர்வதையே நெற்றி கண்
திறப்பதாக பொதுவில் குறிப்பிடுகின்றனர்.
இத்தகைய மலர்ச்சி நிலையில் சாதகனின்
கவனக்குவிப்பு, விழிப்புணர்வு,
நினைவாற்றல் போன்றவை பல மடங்கு
அதிகரிக்கும். வாழ்வின் ஞானத்தை எல்லாம்
தன்னகத்தே ஈர்த்துக் கொண்ட உயரிய நிலை
இது.
குண்டலினி - துரியம்.
----------------------------------
மூலாதாரத்தில் துவங்குகிற குண்டலினியின்
பயணத்தின் உச்ச நிலையான துரியம் பற்றி
இன்று பார்ப்போம். இதற்கு சகஸ்ரதளம்
என்கிற மற்றொரு பெயரும் உண்டு.
மூலாதாரத்தில் இருந்து விழித்தெழுந்த
குண்டலினி அனாகத சக்கரத்தை அடையும்
போது அதனை அக்னி குண்டலினி என்றும்,
அனாகதத்தில் இருந்து எழுந்து மேலேறி
ஆக்ஞா சக்கரத்தை மலர்த்திய நிலையில்
அதனை சூரிய குண்டலினி என்றும், ஆக்ஞா
சக்கரத்தை கடந்து துரியத்தை நோக்கி
பயணிக்கும் போது அதனை சந்திர
குண்டலினி என்றும், துரியம் மலர்ந்த
நிலையில் அதனை துரிய குண்டலினி
என்றும் அழைக்கின்றனர்.
துரியம் பற்றி போகர் பின் வருமாறு
விளக்குகிறார்.
தானென்ற ஆக்ஞையை தாண்டி அப்பால்
தனிததோர் எட்டுவிரல் மேலே கேளு
கோனான குருபத்ந்தான் கூடிப்பாரு
குறிப்பான இதழ்தான் ஓர்ஆயியிரதெட்டு
ஆசான நடுமையம் ஐங்கோணமாகும்
அகாரமொடு உகாரமொடு மகாரமாகும்
நானான நாதமொடு விந்து ஐந்தும்
நலத்தஐங் கோணத்தில் நிற்கும்பாரே .
- போகர்.
ஆக்ஞா சக்கரத்தில் இருந்து எட்டு விரற்கடை
மேலே நமது தலையின் உச்சியில் இந்த சக்தி
ஆதார மையம் அமைந்திருக்கிறது. நமது
மூளை இதற்கு தொடர்பான உறுப்பாக
கூறப்பட்டிருக்கிறது.இந்த சக்கரமானது
ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரை மலரை
போன்றது என்கின்றனர்.அதாவது ஆயிரம்
யோக நாடிகள் இந்த சக்கரத்தில் இருந்து
வெளிக் கிளம்புகின்றன.
போகர் தனது பாடலில் விவரித்திருக்கும்
துரிய சக்கரத்தின் மாதிரி படம் இது.
ஆக்ஞா சக்கரத்தில் இருந்து துரிய நிலைக்கு
குண்டலினியை எழுப்புவது என்பது
குண்டலினி யோகத்தின் மிக உயரிய
செயல்பாடு. இதற்கென பிரத்யேக பயிற்சிகள்
கூறப் பட்டிருக்கின்றன. அவ்வாறு உயர்த்தப்
பட்ட சந்திர குண்டலினி மலர்த்திய
துரியசக்கரம் தரும் அனுபவத்தை நம் போன்ற
சாமான்யர்களின் வார்த்தைகளால் விவரிக்க
இயலாது. பரவச நிலை என்பதே நமது ஆகக்
கூடிய வ்ருணனையாக இருக்கும்.
கவனத்தை குவித்து, அந்த கவனத்தையே
கவனிக்கிற பயிற்சியின் உச்சத்தில் அந்த
கவனமே கரைந்து போய்விட்டால்.....
சித்தர்களோ இதனை நிலையற்ற நிலை
என்கின்றனர். அதாவது நம்முடைய விழிப்பு
நிலை, கனவு நிலை, முழுமை நிலை என்கிற
மூன்றும் ஒன்றில் ஒன்றாய் குவிந்து,
கரைந்து போகிற நான்காவது பரவச நிலை.
இந்த நிலையில் தானே தேடுகிறவனாகவும்,
தானே தேடலாகவும், தானே தேடு
பொருளாகவும் இருப்பதையே துரிய நிலை
அல்லது சமாதி நிலையாக சித்தர் பெருமக்கள்
குறிப்பிடுகின்றனர்.
ஔவையாரும் கூட இந்த அனுபவத்தை
இப்படி கூறுகிறார்....
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
குண்டலினி.... நாடிகளின் சூட்சுமம்!!
---------------------------------------------------------
குண்டலினி தொடரின் நெடுகே ஒவ்வொரு
சக்தி ஆதார சக்கரங்களில் இருந்து தாமரை
இதழைப் போல வெளிக் கிளம்பும் நாடிகளைப்
பற்றி பார்த்தோம்.
இதன் பின்னே இருக்கும் சூட்சுமத்தை
தொடரின் இறுதியில் பகிர்வதாக
கூறியிருந்தேன். தொடரின் போக்கில் இந்த
குறிப்பை அவதானிக்க தவறி விட்டேன்.
நிறைய நண்பர்கள் இதைக் குறிப்பிட்டு
மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர்.
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி....
குண்டலினி யோகத்தின் போது
மூலாதாரத்தில் நான்கு இதழ்களும்,
சுவாதிஷ்டானத்தில் ஆறு இதழ்களும்;
மணிபூரகத்தில் பத்து இதழ்களும்,
அநாகதத்தில் பன்னிரெண்டு இதழ்களும்,
விசுத்தியில் பதினாறு இதழ்களும்,
ஆக்ஞையில் இரண்டு இதழ்களும் வெளிக்
கிளம்புவதைப் பார்த்தோம். இந்த நாடிகள்
அதிரும் போது ஒலி உருவாவதையும்
பார்த்தோம்.
சித்தரியலில் பஞ்சாக்கர எழுத்துக்கள் என்பது
மிக நுட்பமானது, சூட்சுமம் நிறைந்ததும்
கூட. பஞ்சாக்கரம் என்பது ஐம்பத்தியோரு
தமிழ் எழுத்துக்களையே குறிக்கிறது.
”சிதம்பர சக்கரம்” எனப்படும் திருவம்பலச்
சக்கரத்தின் உயிர் நாடியாகவும் இந்த
எழுத்துக்களே விளங்குகிறது.
அகத்தியர் துவங்கி திருமூலர், பட்டினத்தார்,
சிவவாக்கியார், கோரக்கர் போன்ற பல சித்தர்
பெருமக்கள் இந்த ஐம்பத்தி ஒன்று
எழுத்த்துக்களின் மகத்துவத்தை
பாடியுள்ளனர்.
திருமூலர் தனது திருமந்திர மாலை என்னும்
நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"பெறுதியில் அம்முதல் பேசும்க்ஷவ் வீறாய்
அறிவதெழுத்தைம்பத் தொன்றுமங் கானதே"
- திருமூலர்.
மேலும் திருமூலரே தனது திருமந்திரம்
என்னும் நூலிலும் பஞ்சாக்கரம் பற்றி
இவ்வாறு குறிப்பிடுகிறார்.
அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும்
அமர்ந்ததே.
- திருமூலர்.
அருணகிரி நாதரும் தனது திருப்புகழில்
பஞ்சாக்கரத்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"அகர முதலென உரைசெய்
ஐம்பத்தோரட்சரமும்"
-அருணகிரிநாதர்.
இப்படி இன்னும் எத்தனையோ சித்தர்களின்
பாடல்களை பஞ்சாக்கரத்திற்கு எடுத்துக்
காட்டாய்ச் சொல்லலாம். இவற்றின் படி, இந்த
ஐம்பத்தி ஒரு எழுத்துக்களையும் மிக
முக்கியமானதாகவும், உயர்
தனித்துவமானவை என்று போற்றியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இப்போது மீண்டும் குண்டலினிக்கு
வருவோம். குண்டலினி யோகத்தில் ஏழு
முக்கிய ஆதாரங்களில் இருந்து
வெளிக்கிளம்பும் நாடிகளின் அதிர்வுகளால்
ஏற்படும் ஒலிகளை தமிழ் எழுத்துக்களாக
குறித்திருப்பது உங்களுக்கு இப்போது
நினைவுக்கு வரலாம்.
நண்பர்களே, குண்டலினி யோகத்தில்
ஒவ்வொரு ஆதார மையமும் சித்திக்கும்
போது உருவாகும் அதிர்வுகள் எழுப்பும்
ஓசையைத்தான் சித்தர்கள் பஞ்சாக்கர
எழுத்துக்கள் என குறிப்பிட்டிருக்கின்றனர்.
ஆறு ஆதார சக்கரத்தில் இருந்து எழும்பும்
ஐம்பது நாடிகளின் சப்பதங்கள் அய்ம்பது
எழுத்துக்களாகவும், துரிய நிலை சித்திக்கும்
போது உருவாகும் உருவாகும்
பேசாமொழியான ஓரெழுத்தும் சேர
ஐம்பத்தியோரு எழுத்துக்கள் ஆகின்றன. இந்த
பேசா மொழியைப் பற்றி முந்தைய பதிவு
ஒன்றில் பகிர்ந்திருக்கிறேன். இதனை
நாயோட்டு மந்திரம் என்றும் அழைப்பர்.
வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு இது.
இதனை மனதில் கொண்டே நம் பெரியவர்கள்
தமிழை அழுத்தம் திருத்தமாய் உச்சரித்து
பேசினாலே உடல்நலம், ஆன்மநலம் சிறக்கும்
என கூறியிருக்கின்றனர். நாம்தான் அதனை
மனதில் கொள்ளாமல் பிறமொழி மோகத்தில்
உழன்று கொண்டிருக்கிறோம்.
குண்டலினி என்கிற மகா சமுத்திரத்தில் நான்
உணர்ந்த ஒன்றிரண்டு துளிகளை மட்டுமே
இதுவரை உங்களோடு
பகிர்ந்திருக்கிறேன்.இந்த தொடரில்
பிழையேதும் இருப்பின் அதைப் பொறுத்து
என்னை திருத்திட வேண்டுகிறேன்.
குண்டலினி பற்றி ஒருவர் முழுமையாக
அறியவும், புரியவும் பல காலம் பிடிக்கும்.
தொடர்ச்சியான தேடுதல் மட்டுமே நம்மை
சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்கும்.
எதிர்காலத்தில் குருவருள்
அனுமதிக்குமானால் இந்த தொடரின்
இரண்டாம் பகுதியாக இதனுள்
உறைந்திருக்கும் நுட்பங்களையும் அதனை
கையாளும் வகைகளையும் பகிர்ந்திட
முயற்சிக்கிறேன். இனிவரும் நாட்களில் இந்த
தொடரினை மின்னூலாக்கி இங்கே பொதுவில்
பகிர்ந்து கொள்கிறேன்.
எல்லாம் வல்ல குருநாதரின் அருளினாலே
இது சாத்தியமாயிற்று. அவரின் பாத
கமலத்தில் இந்த முயற்சியை சமர்ப்பித்து
பாகத்தை நிறைவு செய்கிறேன.
அருள் விளக்கங்கள்                                                        





{ நமக்குள் உள்ள 6 ஆதாரங்கள் பற்றி சித்தர்களால் உலகுக்கு அளிக்க பட்ட உண்மைகளும் அவற்றின் கட்டமைப்புகளும் . }
குண்டலினி - மூலாதாரம்.
------------------------------------------
மூலாதாரம் என்பது கருவாய்க்கும்,
எருவாய்க்கும் இடையே இருப்பதாக முன்னரே
பார்த்தோம். சித்தர்கள் இந்த மூலாதாரத்தின்
இடத்தினை மிகத் தெளிவாக
விளக்கியிருக்கின்றனர்.
திருமூலர் தனது திருமந்திரத்தில் பின்
வருமாறு விளக்குகிறார்....
நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
கூவிக் கொண்டு ஈசன் குடியிருந்தானே
- திருமூலர்.
போகரும் தனது போகர் ஏழாயிரம் நூலில் பின்
வருமாறு விளக்குகிறார்...
அகாரத்தின் மேலாகக் கணேசர் நிற்பார்
அதிலே யோர்கோணத் திலுகாரம் நிற்கும்
உகாரத்தில் வல்லபையாம் சக்தி நிற்பாள்
ஒடுங்கிய தோர்முனை யொன்றில்
கதலிப்பூவாய்
புகாரமாய் முகங்கீழ்க் குண்டலியாம் சக்தி
பெண்பாம்பு போல்சுருட்டிச் சீறிக் கொண்டு
சுகாரமாய்ச் சுழிமுனையூ டுருவி நிற்பாள்
துரியாதீ தம்மென்ற வவத்தை தானே
- போகர்.
மூலாதாரச் சக்கரமானது பிறப்பு
உறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட
பகுதியில் உள்ளது. அது இடை, பிங்கலை,
சுழுமுனை என்கிற மூன்று நாடிகள் சேரும்
இடத்தில் உள்ளது. இன்னும் துல்லியமாக
சொல்வதானால் ஆசனத்திற்கு இரண்டு
விரற்கிடை மேலும், பிறப்பு உறுப்புக்கு இரு
விரற்கிடை கீழும் உள்ள நான்கு விரற்கிடை
அளவுள்ள இடத்திலேயே மூலாதார சக்கரம்
இருக்கின்றது.
உடலில் இருக்கும் மற்றச் சக்கரங்களைத்
தாங்குவதால் இதனை ஆதார சக்கரம்
என்கின்றனர். அதாவது மற்றச் சக்கரங்களுக்கு
தேவையான சக்தியைத் தரக் கூடிய
குண்டலினி இச்சக்கரத்தில் தான் சுருண்டு
படுத்துள்ளது. இச்சக்கரத்தில் இருந்து நான்கு
முக்கிய நாடிகள் வெளிக் கிளம்புகின்றன.
அவை தாமரையின் நான்கு இதழ்கள் போல்
தோற்றமளிக்கும். ஒவ்வொரு நாடியின்
அசைவினால் ஏற்படும் சப்தங்கள் "வ ஸ ச
ஷ" என்ற எழுத்துக்களால்
குறிக்கப்படுகின்றன.
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
மூலாதார சக்கரத்தின் மாதிரி படம் இது.
இந்த நான்கு எழுத்துக்களும் முறையே மனம்,
புத்தி, சித்தம், அகங்காரம் குறிக்கிறது
என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.
இச்சகக்கரத்தின் மத்தியிலுள்ள யோனிக்கு
“காமம்”என்று பெயர். அதையே சித்தர்கள்
தொழுகிறார்கள். இங்குதான் குண்டலினி
தூங்குவது போல் அசைவற்றுக் கிடக்கிறது.
இச்சக்கரத்தின் அதிதேவன் வினாயகர்,
அதிதேவதை டாகினி/தாகினி என்று
குறிப்பிடப்படுகிறது. இந்த மூலாதார
சக்கரத்தின் பீஜ மந்திரமாக "லம்" என்பது
குறிப்பிடப்படுகின்றது.
பஞ்சபூதங்களில் ஒன்றான பூமி இந்த்
சக்கரத்தின் மூலக்கூறாக கூறப் படுகிறது.
சிறுநீரகம் தொடர்புடைய உறுப்பாக
கூறப்படுகிறது.
குருவருளின் துனையோடும்,
வழிகாட்டுதலோடும் தனிமையான இடத்தில்
அமர்ந்து மூலாதார சக்கரத்தை மனதில்
நிறுத்தி மூல மந்திரத்தை உருவேற்றிட
குண்டலினி விழித்துக் கொள்ளும். இதனை
தன் உணர்வுகளால் மட்டுமே அறிய
முடியும். மூலாதாரத்தில் வெப்பம்
உருவாவது, மூலாதாரத்தில் பரபரவென
எதோவொன்று ஊறும் உணர்வு, உடல்
புல்லரித்தல் போன்ற அனுபவங்களை நான்
உணர்ந்திருக்கிறேன்.
குண்டலினி விழித்துக் கொண்டவர்களுக்கு
கடுமையான பசியும், அதிக தூக்கமும்
உண்டாகும்.
குண்டலினி - சுவாதிஷ்டானம்.
-----------------------------------------------
குண்டலினி பயிற்சியில் இரண்டாவது சக்தி
ஆதார மையமான சுவாதிஷ்டானம் பற்றி
இன்று பார்ப்போம். இதற்கு “நிராகுலம்”
என்றொரு பெயரும் உண்டு. நிராகுலம்
என்றால் துன்பமற்று ஞானமயமாக இருப்பது
என பொருள்படும்.
மூலாதாரத்திற்கு மேலே இருக்கும்
இரண்டாவது சக்கரம் சுவாதிஷ்டானம். நமது
பிறப்பு உறுப்பிற்கு மேலே இது
இருக்கிறதாம். அதாவது மூலாதார சக்கரத்தில்
இருந்து நான்கு விரற்கடை அளவு மேலே
இருப்பதாக கூறியிருக்கின்றனர். இந்த
சக்கரமானது பஞ்சாட்சர எழுத்துக்களான
"சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான
"ந" என்னும் எழுத்தையும்,அதன்
தத்துவத்தையும் விளக்குவதாக
அமைகின்றது.
இச்சக்கரத்தினின்று ஆறுமுக்கிய நாடிகள்
வெளிக் கிளம்புகின்றன. அவை தாமரையின்
ஆறு இதழ்கள் போல் உருவகப் படுத்தி
இருக்கின்றனர். ஒவ்வொரு நாடியின்
அசைவினால் ஏற்படும் சப்தங்கள் "ஸ, ஹ, ம்,
ய, ர, ல" என்ற எழுத்துக்களால்
குறிக்கப்படுகின்றன. இதன் மையத்தில்
வளைந்த பிறைச் சந்திரன் ஒன்றும் குறிக்கப்
படுகிறது.
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
சுவாதிஷ்டான சக்கரத்தின் மாதிரி படம் இது.
சுவாதிஷ்டானத்தின் அதிதேவன் பிரம்ம
தேவர். அதிதேவதை ராகிணி/சாகிணி. பஞ்ச
பூதங்களில் ஒன்றான நீர் இதன் மூலக் கூறாக
கூறப்பட்டிருக்கிறது. சுவாதிஷ்டானமானது
நமது பிறப்பு உறுப்புகள், கருப்பை, குடல்
ஆகிய உறுப்புகளுக்கு தொடர்புடையதாம்.
சுவாதிஷ்டானத்திற்கான மூல மந்திரம் “வம்”
என்பதாகும். சுவாதிஷ்டானத்தை மனதில்
இருத்தி மூலமந்திரத்தை உருவேற்றி வர
குண்டலினி இந்த மையத்தை அடையும். இது
விடாத தொடர் முயற்சி மற்றும்
பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.
சித்தர்கள் இந்த சக்கரங்கள் ஒவ்வொன்றையும்
ஆணின் அம்சமாகவே கூறியிருக்கின்றனர்.
குண்டலினி சக்தியை பெண் அம்சமாக
அதாவது வாலையின் அம்சமாய்
உருவகிக்ன்றனர். இந்த சக்கரத்தின் வழியே
குண்டலினி சக்தி பாயும் போது அவை
பூரணத்துவம் அடைந்து மலர்வதே
சித்தியடைதல் எனப் படுகிறது.
இந்த சக்கரம் மலர்வதால் நமது சுய
கட்டுப்பாட்டின் தீவிரம் தூண்டப் பட்டு
விழிப்புணர்வு நிலை மிளிரும். நமது
எண்ணம், செயல், சிந்தனை சார்ந்த
விஷயங்களின் மீதான மேம்பட்ட
பிடிப்புணர்வுக்கு இந்த சக்கரம் தூண்டப்
படுவது அவசியமாகிறது.
குண்டலினி - மணிபூரகச் சக்கரம்.
---------------------------------------------------
மூன்றாவது சக்தி ஆதார மையமான
மணிப்பூரக சக்கரம் பற்றி இன்று பார்ப்போம்.
தாயின் வயிற்றில் இருந்து பிறந்த உடன்
நம்முடைய உடலில் ஒரு முடிச்சு இடப்
படுகிறது. அது தொப்புள் கொடியாகும்.
இந்த உடல் உருவாகி, உயிராகத் தேவையான
பிராணன் இந்த கொடியின் வழியேதான்
நமக்குள் அடைக்கப் படுகிறது என சித்தர்
பெருமக்கள் கூறுகின்றனர். இவ்வாறு
அடைக்கப் பட்ட பிராணன் தொப்புளைச் சுற்றி
குடி கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றனர்.
இந்த சக்தி மையத்தையே நாம் மணிப்பூரகம்
என்கிறோம். இது சுழிமுனை நாடியில்
அமைந்திருக்கிறது. இது நமது வயிறு,
சிறுகுடல், மண்ணீரல், கல்லீரல் போன்ற
உறுப்புகளுடன் தொடர்புடையதாக கூறப்
படுகிறது. இதன் மூலக்கூறு நெருப்பு
ஆகும். மணிப்பூரகத்தில் தகித்துக்
கொண்டிருக்கும் இந்த நெருப்பு மங்கி
அணையும் போதுதான் நம் உடல் நோய்வாய்ப்
பட்டு பலவீனம் அடைந்து பின்னர் உயிர்
பிரிவதாகவும் ஒரு கருத்தாக்கம்
கூறப்பட்டிருக்கிறது.
இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற
பத்து யோக நாடிகள் கிளம்புகின்றன. இதன்
அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை டட,
ணத, தத, தந, பப என்ற எழுத்துக்களால்
குறிப்பிடுகின்றனர். மணிப்பூரகத்தின்
அதிதேவன் விஷ்ணு, அதிதேவதை லக்குமி/
லாகிணி. இதற்கான மூல மந்திரம் “ரம்”
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
மணிபூரகச் சக்கரத்தின் மாதிரி படம் இது.
மணிப்பூரக சக்கரத்தின் நடுவே முக்கோண
வடிவம் ஒன்று உள்ளது. இது நெருப்பினை
அடையாளப் படுத்துகிறது. இந்த
சக்கரமானது “சிவயநம” என்னும்
எழுத்துக்களில் ஒன்றான “ம்” என்பதன்
தத்துவத்தை விளக்குவதாக
அமைந்திருக்கிறது.
மணிப்பூரகத்தை மனதில் இருத்தி, இதன்
மூல மந்திரத்தினை உருவேற்ற
சுவாதிஷ்டானத்திலிருந்து
குண்டலினியானது எழும்பி மணிப்பூரகத்தை
வந்தடையுமாம். இது மிகக் கடுமையான
பயிற்சி மற்றும் முயற்சியினால் மட்டுமே
சாத்தியமாகும்.
முறையான பயிற்சி மற்றும் அனுபவம்
வாய்ந்த குருவின் வழிகாட்டுதல்
இல்லையெனில் இந்த நிலையை தாண்டுவது
மிகக் கடினம். ஏனெனில் முறையற்ற பயிற்சி
உடலில் தேவையற்ற பக்க விளைவுகளை
உருவாக்கிடும். இதை என்னுடைய சொந்த
அனுபவத்திலும் உணர்ந்திருக்கிறேன். எனவே
தக்க வழிகாட்டுதலுடன் பயில
வேண்டுகிறேன். இதனை ஒரு எச்சரிக்கையாக
எடுத்துக் கொண்டாலும் சரிதான்.
முறையாக பயிற்சி செய்து
சுவாதிஷ்டானத்தில் மலர்ந்திருக்கும்
குண்டலினி மணிப்பூரகத்தை அடைந்தால்,
நமது உயிர் சக்தி தூண்டப் பட்டு உடலின்
உறுதி மற்றும் உடல் நலம் மேம்படும்.
இத்தகைய சக்கரம் தூண்டப் பட்டவர்கள்
கடுமையான உழைப்புக்கும்
அஞ்சாதவர்களாய் மாறிவிடுவர்.
குண்டலினி - அனாகதம்.
---------------------------------------
நமது உடலில் இருக்கும் நான்காவது ஆதார
சக்கரமான அனாகதம் பற்றி இன்று பார்ப்போம்.
அநாகதம் என்றால் உருவமற்ற அல்லது
உருவகிக்க இயலாத ஒலி என்பதாகும்.
இந்த ஆதார மையமானது நமது கழுத்திற்கு
கீழே இதயத்திற்கும், நுரையீரலுக்கும்
நடுவில் சுழிமுனை நாடியில்
அமைந்திருக்கிறது.
இதனை அகத்தியர்
பின்வருமாறு விளக்குகிறார்.
பாரப்பா பூரகத்தின் மேலேகேளு
பாடுகிறோ மெட்டங்குலந்தா
னனாகததின்வீடு
தேர்ந்தயிதழ் பன்னிரெண்டாய் சுற்றிநிக்கும்
ஏரப்பா தேயுவது யிருப்பிடமாய் நிற்க்கும்
பிருப்பிடத்தில் சிகாரமென்ற எழுத்தாமே
எழுத்தான பூதமதின் பீஜங் கேளு
இயம்புவேன் யமதுவும் மிடமேயாகும்
செத்தான அவ்வெழுத்தில்
ருத்ரன்காகினிதானே.
-அகத்தியர்.
இந்த அனாகத சக்கரம் இதயத்தோடு
தொடர்புடையதாக கூறப் படுகிறது. இதன்
மூலக்கூறு காற்று. அதிதேவன் ருத்ரன்,
அதிதேவதை காகினி. இதன் மூல மந்திரம்
“யம்” என்பதாகும். இந்த சக்கரமானது
பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம"
என்னும் எழுத்துகளில் ஒன்றான "சி" என்னும்
எழுத்தையும் அதன் தத்துவத்தையும்
விளக்குவதாக அமைகின்றது.
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
அனாகதச் சக்கரத்தின் மாதிரி படம் இது.
இந்த சக்கரத்தில் இருந்து பன்னிரெண்டு யோக
நாடிகள் தாமரை இதழ் போல வெளிக்
கிளம்புகின்றன. இவற்றின் அசைவுகளால்
உண்டாகும் சப்தங்களை சித்தர் பெருமக்கள்
பின் வரும் எழுத்துக்களால் குறிக்கின்றனர்.
அவை சங, கக, கக, டட, ஞஜ, ஜச என்பதாகும்.
சக்கரத்தின் மையத்தில் சப்த பிரம்மத்தின்
நாதமான, அனாகத சப்தம் கேட்கும்.
அனாகத சக்கர இடத்தை மனதில் இருத்தி
மூல மந்திரத்தை தொடர்ந்து உருவேற்றி வர
மணிப்புரக சக்கரத்திலிருந்து குண்டலினி
எழும்பி, அனாகதம் வந்தடையும். இந்த சித்தி
சில நாட்களிலும் வாய்க்கும், சமயங்களில்
சில வருடங்கள் கூட ஆகலாம். இது முழுக்க
சாதகனின் பொறுமை மற்றும் கவனக்
குவிப்பை பொறுத்தது.
மூலாதார சக்கரத்தில் இருந்து எழுப்பப் பட்ட
குண்டலினியானது அனாகத சக்கரத்தை
வந்தடையும் போது அதற்கு “அக்கினி
குண்டலினி” என்று பெயராகிறது. இப்படி
அனாகத சக்கரம் மலர்ந்த நிலையில்,
சாதகனின் உள்ளத்தில் கருணை, அன்பு,
இரக்கம் போன்ற சாத்வீக குணங்கள்
மேம்படும். படைப்பாற்றலின் ரகசியமும்
புரியவரும்.
குண்டலினி - விசுத்தி.
--------------------------------
மூலாதாரத்திலிருந்து ஐந்தாவது சக்கரமான
விசுத்தி பற்றி இன்று பார்ப்போம்.
இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.
ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம்
அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு
மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம்
பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும்
பாலகனே அட்சரந்தான் வகாரமாகும்
வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே.
- அகத்தியர்.
இந்த சக்தி ஆதார மையமானது நமது
தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை
நாடியில் அமைந்து இருப்பதாக
குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை,
மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள்,
நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன்
விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக
குறிப்பிடப் படுகிறது.
பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம"
என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும்
எழுத்தையும், அதன் தத்துவத்தையும்
விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது.
இச்சக்கரத்தின் அதிதேவன் சதாசிவன், அதி
தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான
ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூல
மந்திரம் “ஹம்” எனப்படுகிறது.
இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற
பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன.
அவற்றின் அசைவுகளால் ஏற்படும்
சப்தங்களை லுரூ, ருஊ, வஈ, இஆ, அஅ,
அம்ஔ, ஓஐ, ஏலூ என்ற எழுத்துக்களால்
குறிக்கப்படுகின்றன. இந்த தாமரை இதழ்களின்
எண்ணிக்கையில் ஒரு சூட்சுமம் அடங்கி
இருக்கிறது. இந்த தொடரின் முடிவில் அது
என்ன என்பதை பகிர்ந்து கொள்கிறேன்.
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
விசுத்திச் சக்கரத்தின் மாதிரி படம் இது.
இந்த சக்கர இடத்தை மனதில் நிறுத்தி, மூல
மந்திரத்தினை உருவேற்றி வர அனாகத
சக்கரத்தில் நிலை கொண்டிருக்கும் அக்கினி
குண்டலினியானது மேலெழும்பி விசுத்தி
சக்கரம் வந்தடையும். இந்த தியானத்தினை
“ஆகாச தாரணை” என்கின்றனர் சித்தர்
பெருமக்கள்.
இந்த சக்கரம் மலர்வதன் மூலம் தீமையை
உருவாக்கும் அல்லது விளைவிக்கும்
எண்ணங்கள், உணர்வுகள் எல்லாம் சாதகனை
விட்டு நீங்கிடும். இதனால் எதனையும்
விருப்பு வெறுப்போ அல்லது பற்றுதலோ
இல்லாது சாட்சி நிலையில் இருந்து கவனிக்க
முடியும். நான் என்கிற அகந்தை அழிந்து
அன்பும், கருணையும் மிளிர்ந்தவனாகிடுவான்
என்கின்றனர்.
இதுவரை நாம் பார்த்த இந்த ஐந்து
சக்கரங்களும் ஆகாச தத்துவ ஞானம் என்ற
வகையில் அடங்கும். இதற்குமேல் வரும்
மற்ற இரண்டு சக்கரங்களும் மனஸ தத்துவ
வகையை சார்ந்தவை.
குண்டலினி - ஆக்ஞா.
----------------------------------
மூலாதாரத்திலிருந்து ஆறாவது சக்தி ஆதார
மையமாய் குறிக்கப்படும் ஆக்ஞா சக்கரம்
பற்றி இன்று பார்ப்போம்.
இதனை அகத்தியர்
பின்வருமாறு விளக்குகிறார்.
ஆள்வாயே யாதாரஞ் சொச்சங்கேளு
அருளினோம் விசுத்தி யாக்கினையைகேளு
பாள்வாயே இதற்க்குமேல்
பதினாறங்குலந்தான்
பாலகனே கண்டமார் புருவமாகும்
மாள்வாயே மளவாகி யளவாக்லோங்கி
மகத்தான யிரண்டிதளாய் பிரிந்தே நிற்கும்
யேள்வாயே வட்சரந்தான் னிரண்டதாகும்
இதனடுவில் யகார மாக்கினை வீடாமே.
- அகத்தியர்.
இந்த சக்கரம் நமது புருவ மத்திக்கு நேராக
மூளையில் அமைந்திருப்பதாக குறிப்பிடப்
படுகிறது. இன்னும் சரியாக சொல்வதெனில்
நமது நெற்றியில் உள்ள பள்ள முடிச்சுக்கு
இனையாக இருக்கிறது. இதற்குத் 'திரிகூடம்"
என்றும் பெயர். இந்த ஆக்ஞா சக்கரமும் மற்ற
சக்கரங்களைப் போல சுழுமுனை நாடியில்
அமைந்துள்ளது.
பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம"
என்னும் எழுத்துகளில் ஒன்றான "ய" என்னும்
எழுத்தையும் அதன் தத்துவத்தையும்
விளக்குவதாக இது அமைகின்றது. இதன்
மூலக்கூறு நெருப்பு. கண்கள், நெற்றி
போன்றவை தொடர்புடைய உறுப்புகளாகும்.
அக்ஞா சக்கரத்தில் இரண்டு தாமரை
இதழ்களை போல் இருபக்கமும் எதிரெதிரே
இரண்டு யோக நாடிகள் உள்ளன. இவற்றை
சூரிய சந்திர அம்சமாக உருவகம்
செய்திருக்கின்றனர். இதன் அசைவுகளால்
ஏற்படும் சப்தங்களை ஹ, ள என்ற
எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
ஆக்ஞா சக்கரத்தின் மாதிரி படம் இது.
இந்த சக்கரத்தின் அதிதேவன் பரமசிவன், அதி
தேவதை வாகினி. மூல மந்திரம் "ஓம்".
அக்ஞா சக்கர இடத்தை மனதில் நிறுத்தி, மூல
மந்திரத்தை உருவேற்றி வர விசுத்தி
சக்கரத்தில் இருக்கும் குண்டலினியானது
மேலேறி அக்ஞா சக்கரத்தை வந்தடையும்.
ஆக்ஞா சக்கரம் மலர்வதையே நெற்றி கண்
திறப்பதாக பொதுவில் குறிப்பிடுகின்றனர்.
இத்தகைய மலர்ச்சி நிலையில் சாதகனின்
கவனக்குவிப்பு, விழிப்புணர்வு,
நினைவாற்றல் போன்றவை பல மடங்கு
அதிகரிக்கும். வாழ்வின் ஞானத்தை எல்லாம்
தன்னகத்தே ஈர்த்துக் கொண்ட உயரிய நிலை
இது.
குண்டலினி - துரியம்.
----------------------------------
மூலாதாரத்தில் துவங்குகிற குண்டலினியின்
பயணத்தின் உச்ச நிலையான துரியம் பற்றி
இன்று பார்ப்போம். இதற்கு சகஸ்ரதளம்
என்கிற மற்றொரு பெயரும் உண்டு.
மூலாதாரத்தில் இருந்து விழித்தெழுந்த
குண்டலினி அனாகத சக்கரத்தை அடையும்
போது அதனை அக்னி குண்டலினி என்றும்,
அனாகதத்தில் இருந்து எழுந்து மேலேறி
ஆக்ஞா சக்கரத்தை மலர்த்திய நிலையில்
அதனை சூரிய குண்டலினி என்றும், ஆக்ஞா
சக்கரத்தை கடந்து துரியத்தை நோக்கி
பயணிக்கும் போது அதனை சந்திர
குண்டலினி என்றும், துரியம் மலர்ந்த
நிலையில் அதனை துரிய குண்டலினி
என்றும் அழைக்கின்றனர்.
துரியம் பற்றி போகர் பின் வருமாறு
விளக்குகிறார்.
தானென்ற ஆக்ஞையை தாண்டி அப்பால்
தனிததோர் எட்டுவிரல் மேலே கேளு
கோனான குருபத்ந்தான் கூடிப்பாரு
குறிப்பான இதழ்தான் ஓர்ஆயியிரதெட்டு
ஆசான நடுமையம் ஐங்கோணமாகும்
அகாரமொடு உகாரமொடு மகாரமாகும்
நானான நாதமொடு விந்து ஐந்தும்
நலத்தஐங் கோணத்தில் நிற்கும்பாரே .
- போகர்.
ஆக்ஞா சக்கரத்தில் இருந்து எட்டு விரற்கடை
மேலே நமது தலையின் உச்சியில் இந்த சக்தி
ஆதார மையம் அமைந்திருக்கிறது. நமது
மூளை இதற்கு தொடர்பான உறுப்பாக
கூறப்பட்டிருக்கிறது.இந்த சக்கரமானது
ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரை மலரை
போன்றது என்கின்றனர்.அதாவது ஆயிரம்
யோக நாடிகள் இந்த சக்கரத்தில் இருந்து
வெளிக் கிளம்புகின்றன.
போகர் தனது பாடலில் விவரித்திருக்கும்
துரிய சக்கரத்தின் மாதிரி படம் இது.
ஆக்ஞா சக்கரத்தில் இருந்து துரிய நிலைக்கு
குண்டலினியை எழுப்புவது என்பது
குண்டலினி யோகத்தின் மிக உயரிய
செயல்பாடு. இதற்கென பிரத்யேக பயிற்சிகள்
கூறப் பட்டிருக்கின்றன. அவ்வாறு உயர்த்தப்
பட்ட சந்திர குண்டலினி மலர்த்திய
துரியசக்கரம் தரும் அனுபவத்தை நம் போன்ற
சாமான்யர்களின் வார்த்தைகளால் விவரிக்க
இயலாது. பரவச நிலை என்பதே நமது ஆகக்
கூடிய வ்ருணனையாக இருக்கும்.
கவனத்தை குவித்து, அந்த கவனத்தையே
கவனிக்கிற பயிற்சியின் உச்சத்தில் அந்த
கவனமே கரைந்து போய்விட்டால்.....
சித்தர்களோ இதனை நிலையற்ற நிலை
என்கின்றனர். அதாவது நம்முடைய விழிப்பு
நிலை, கனவு நிலை, முழுமை நிலை என்கிற
மூன்றும் ஒன்றில் ஒன்றாய் குவிந்து,
கரைந்து போகிற நான்காவது பரவச நிலை.
இந்த நிலையில் தானே தேடுகிறவனாகவும்,
தானே தேடலாகவும், தானே தேடு
பொருளாகவும் இருப்பதையே துரிய நிலை
அல்லது சமாதி நிலையாக சித்தர் பெருமக்கள்
குறிப்பிடுகின்றனர்.
ஔவையாரும் கூட இந்த அனுபவத்தை
இப்படி கூறுகிறார்....
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
குண்டலினி.... நாடிகளின் சூட்சுமம்!!
---------------------------------------------------------
குண்டலினி தொடரின் நெடுகே ஒவ்வொரு
சக்தி ஆதார சக்கரங்களில் இருந்து தாமரை
இதழைப் போல வெளிக் கிளம்பும் நாடிகளைப்
பற்றி பார்த்தோம்.
இதன் பின்னே இருக்கும் சூட்சுமத்தை
தொடரின் இறுதியில் பகிர்வதாக
கூறியிருந்தேன். தொடரின் போக்கில் இந்த
குறிப்பை அவதானிக்க தவறி விட்டேன்.
நிறைய நண்பர்கள் இதைக் குறிப்பிட்டு
மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர்.
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி....
குண்டலினி யோகத்தின் போது
மூலாதாரத்தில் நான்கு இதழ்களும்,
சுவாதிஷ்டானத்தில் ஆறு இதழ்களும்;
மணிபூரகத்தில் பத்து இதழ்களும்,
அநாகதத்தில் பன்னிரெண்டு இதழ்களும்,
விசுத்தியில் பதினாறு இதழ்களும்,
ஆக்ஞையில் இரண்டு இதழ்களும் வெளிக்
கிளம்புவதைப் பார்த்தோம். இந்த நாடிகள்
அதிரும் போது ஒலி உருவாவதையும்
பார்த்தோம்.
சித்தரியலில் பஞ்சாக்கர எழுத்துக்கள் என்பது
மிக நுட்பமானது, சூட்சுமம் நிறைந்ததும்
கூட. பஞ்சாக்கரம் என்பது ஐம்பத்தியோரு
தமிழ் எழுத்துக்களையே குறிக்கிறது.
”சிதம்பர சக்கரம்” எனப்படும் திருவம்பலச்
சக்கரத்தின் உயிர் நாடியாகவும் இந்த
எழுத்துக்களே விளங்குகிறது.
அகத்தியர் துவங்கி திருமூலர், பட்டினத்தார்,
சிவவாக்கியார், கோரக்கர் போன்ற பல சித்தர்
பெருமக்கள் இந்த ஐம்பத்தி ஒன்று
எழுத்த்துக்களின் மகத்துவத்தை
பாடியுள்ளனர்.
திருமூலர் தனது திருமந்திர மாலை என்னும்
நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"பெறுதியில் அம்முதல் பேசும்க்ஷவ் வீறாய்
அறிவதெழுத்தைம்பத் தொன்றுமங் கானதே"
- திருமூலர்.
மேலும் திருமூலரே தனது திருமந்திரம்
என்னும் நூலிலும் பஞ்சாக்கரம் பற்றி
இவ்வாறு குறிப்பிடுகிறார்.
அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும்
அமர்ந்ததே.
- திருமூலர்.
அருணகிரி நாதரும் தனது திருப்புகழில்
பஞ்சாக்கரத்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"அகர முதலென உரைசெய்
ஐம்பத்தோரட்சரமும்"
-அருணகிரிநாதர்.
இப்படி இன்னும் எத்தனையோ சித்தர்களின்
பாடல்களை பஞ்சாக்கரத்திற்கு எடுத்துக்
காட்டாய்ச் சொல்லலாம். இவற்றின் படி, இந்த
ஐம்பத்தி ஒரு எழுத்துக்களையும் மிக
முக்கியமானதாகவும், உயர்
தனித்துவமானவை என்று போற்றியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இப்போது மீண்டும் குண்டலினிக்கு
வருவோம். குண்டலினி யோகத்தில் ஏழு
முக்கிய ஆதாரங்களில் இருந்து
வெளிக்கிளம்பும் நாடிகளின் அதிர்வுகளால்
ஏற்படும் ஒலிகளை தமிழ் எழுத்துக்களாக
குறித்திருப்பது உங்களுக்கு இப்போது
நினைவுக்கு வரலாம்.
நண்பர்களே, குண்டலினி யோகத்தில்
ஒவ்வொரு ஆதார மையமும் சித்திக்கும்
போது உருவாகும் அதிர்வுகள் எழுப்பும்
ஓசையைத்தான் சித்தர்கள் பஞ்சாக்கர
எழுத்துக்கள் என குறிப்பிட்டிருக்கின்றனர்.
ஆறு ஆதார சக்கரத்தில் இருந்து எழும்பும்
ஐம்பது நாடிகளின் சப்பதங்கள் அய்ம்பது
எழுத்துக்களாகவும், துரிய நிலை சித்திக்கும்
போது உருவாகும் உருவாகும்
பேசாமொழியான ஓரெழுத்தும் சேர
ஐம்பத்தியோரு எழுத்துக்கள் ஆகின்றன. இந்த
பேசா மொழியைப் பற்றி முந்தைய பதிவு
ஒன்றில் பகிர்ந்திருக்கிறேன். இதனை
நாயோட்டு மந்திரம் என்றும் அழைப்பர்.
வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு இது.
இதனை மனதில் கொண்டே நம் பெரியவர்கள்
தமிழை அழுத்தம் திருத்தமாய் உச்சரித்து
பேசினாலே உடல்நலம், ஆன்மநலம் சிறக்கும்
என கூறியிருக்கின்றனர். நாம்தான் அதனை
மனதில் கொள்ளாமல் பிறமொழி மோகத்தில்
உழன்று கொண்டிருக்கிறோம்.
குண்டலினி என்கிற மகா சமுத்திரத்தில் நான்
உணர்ந்த ஒன்றிரண்டு துளிகளை மட்டுமே
இதுவரை உங்களோடு
பகிர்ந்திருக்கிறேன்.இந்த தொடரில்
பிழையேதும் இருப்பின் அதைப் பொறுத்து
என்னை திருத்திட வேண்டுகிறேன்.
குண்டலினி பற்றி ஒருவர் முழுமையாக
அறியவும், புரியவும் பல காலம் பிடிக்கும்.
தொடர்ச்சியான தேடுதல் மட்டுமே நம்மை
சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்கும்.
எதிர்காலத்தில் குருவருள்
அனுமதிக்குமானால் இந்த தொடரின்
இரண்டாம் பகுதியாக இதனுள்
உறைந்திருக்கும் நுட்பங்களையும் அதனை
கையாளும் வகைகளையும் பகிர்ந்திட
முயற்சிக்கிறேன். இனிவரும் நாட்களில் இந்த
தொடரினை மின்னூலாக்கி இங்கே பொதுவில்
பகிர்ந்து கொள்கிறேன்.
எல்லாம் வல்ல குருநாதரின் அருளினாலே
இது சாத்தியமாயிற்று. அவரின் பாத
கமலத்தில் இந்த முயற்சியை சமர்ப்பித்து
பாகத்தை நிறைவு செய்கிறேன.

Tuesday, May 12, 2015

அருள் விளக்கங்கள்                
படித்ததில் சுவாசித்தது 

1] ஓஷோவின் தியான முறை:

சுவாசத்தை கவனித்தல்:

எல்லா விதமான தியான முறைகளையும் உனக்கு சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை. எளிதானதாகவும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் எளிமையானதாகவும் இருக்கும் ஒரு முறையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். இது உலகம் முழுவதும் பரவட்டும். இதை சுவாசத்தை கவனித்தல் என நான் அழைக்கிறேன், இது மிகவும் எளிய முறை.

எப்போது – நீ அமைதியாக அமர்ந்திருக்கக் கூடிய எல்லா நேரங்களிலும், ரயிலிலோ, பஸ்ஸிலோ, விமானத்திலோ பயணம் செல்லும் சமயத்தில் இந்த தியானத்தை செய் .

காலம் – 2 நிமிடங்கள் முதல் எவ்வளவு நேரம் நீ செய்ய விரும்புகிறாயோ அது வரை.

முதல் படி – உனது கண்களை மூடி உனது சுவாசத்தை கவனி. உள்ளே செல்லும்போது நீயும் அதனுடன் உள்ளே செல், வெளியே வரும்போது நீயும் அதனுடன் வெளியே வா.

நீ சுவாசத்துடன் உள்ளே சென்று பின் அதனுடன் வெளியே வருவது என்பது போன்று செய்யும் சமயத்தில் நீ இரண்டு விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய். நீ சுவாசத்துடன் உள்ளே செல்லும்போது அது வெளியே வருவதற்காக திரும்பும் முன் ஒரு கணம் சுவாசத்தில் இடைவெளி வரும். இதேபோல சுவாசத்தை வெளியே விடும்போதும் நிகழும். திரும்பவும் உள்ளே இழுக்கும் முன் ஒரு கணம் இடைவெளி வரும். நீ அதை கவனிக்க கவனிக்க இந்த இரண்டு நிலைகளும் மேலும் மேலும் தெளிவாக, பெரியதாக மாறும். ஒரு சுவாசம் உள்ளே போய் ஒரு கணம் நிற்கும், பின் வெளி வரும். வெளியே வந்தது ஒரு கணம் நின்று பின் உள்ளே போகும். இந்த இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகும்.

பின் ஒரு சமயம் வரும். இந்த இடைவெளி மிகச் சரியாக நாற்பத்தி எட்டு நிமிடங்கள் இது 10,000 வருடங்களுக்கு முன்பே கணக்கிடப்பட்டுள்ளது. இந்த முறையை உபயோகித்த அத்தனை சாதகர்களாலும் மிகச் சரியாக இதே நேரம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அப்படி இடைவெளி வந்து விட்டால் நீ வீடு வந்து சேர்ந்து விடுவாய். தியானம் தரக்கூடிய எல்லாவற்றையும் நீ பெற்று விடுவாய்.

---ஒஷோ--

*********************************************************************
௨] பிணி, திரை, மூப்பு இல்லாத
வாழ்க்கை வேண்டும் என்பதே நீண்ட
நெடுங்காலமாக மனித குலத்தின்
ஆசையாக உள்ளது. அதற்கான
வழிமுறைகளைத் தேடும்
முயற்சிகளும் காலங் காலமாக
நடைபெற்று வருகின்றன. நவீன
மருத்துவ விஞ்ஞானமும் இதற்கான
விடையை முனைந்து தேடி வருகிறது;
இதுவரையில்
வெற்றி கிடைக்கவில்லை.

ஆனால் நமது முன்னோர்கள்
இதற்கான வழிமுறைகளைப்
பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்து விட்டனர்.
யோகாசனம், பிராணாயாமம்,
முத்திரைகள் என நம் முன்னோர்கள்
வகுத்து வைத்த வழிமுறைகள்
அனைத்துமே மூப்பு, திரை,
பிணி என அனைத்
தையுமே வெற்றி கொள்ளும்
மார்க்கங்களாகும்.
திருமந்திரத்தின் மூன்றாம்
தந்திரம் (மூன்றாம் பாகம்) முழுக்க
முழுக்க "அஷ்டாங்க யோகம்'
என்பதைக்
குறித்தே விவரிக்கிறது. பல
சூட்சும
ரகசியங்களை விளக்குகிறது.
"அஷ்டாங்கம்' என்ற வடமொழிச்
சொல்லுக்கு "எட்டு பிரிவுகள்'
என்பது பொருள். முழுமையான
யோகக்
கலையானது எட்டு அம்சங்களைத்
தன்னுள் கொண்டுள்ளது.

அவை முறையே-
1. இயமம்
2. நியமம்
3. ஆசனங்கள்
4. பிராணாயாமம்
5. பிரத்தியாகாரம்
6. தாரணை
7. தியானம்
8. சமாதி

இந்த ஒவ்வொன்றையும்
குறித்து மிக விரிவாக
திருமூலர்
தனது திருமந்திரத்தில்
விளக்கியுள்ளார்.
அவை அனைத்தையும் விவரிக்க
வேண்டுமென் றால் பல பாகங்கள்
கொண்ட ஒரு தனிப்
புத்தகமே எழுத
வேண்டியதிருக்கும்.
தற்போது "பிராணாயாமம்' எனும்
மூச்சுப்
பயிற்சி குறித்து திருமூலர்
கூறியுள்ள சில
உண்மைகளையும், சூட்சும
ரகசியங்களையும் மட்டும்
காணலாம்.
உயிருக்கு ஆதாரமாக
இருப்பது மூச்சுதான்.

எனவேதான் அதை "உயிர் மூச்சு'
என்கிறோம். மனிதன் உணவின்றி பல
நாட்கள் உயிர் வாழ முடியும். நீர்
இல்லாமற்கூட சில நாட்கள் உயிர்
வாழலாம். ஆனால்
காற்று (பிராணவாயு) இல்லாமல்
போனால் எட்டு நிமிடங்களில்
மரணம் நிச்சயம்! உடலின் இயக்கங்கள்
அனைத்திற்கும் இந்த மூச்சுக்
காற்றே ஆதாரம்.

"ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த்
தலைமகன்
உய்யக்கொண்டு ஏறும்
குதிரைமற்று
ஒன்றுண்டு
மெய்யர்க்கு பற்றுக் கொடுக்கும்
கொடாது போய்ப்
பொய்யரைத்
துள்ளி விழுந்திடும் தானே.'
(திருமந்திரம்)

நாம்
நமது ஐம்பொறிகளாலேயே இந்த
உலகை அளக்கிறோம்.
ஐம்பொறிகளின் வழியாகக்
கிடைக்கும் செய்திகளின்,
உணர்வு களின்
அடிப்படையிலேயே நமது செயல்பாடு களும்
அமைகின்றன. கண், காது, மூக்கு,
வாய், மெய் (தோல்) ஆகிய இந்த
ஐம்பொறிகளையே திருமூலர்

"ஐவர்' என்று குறிக்கிறார்.
இந்த ஐவர்க்கும் நாயகனாகவும், இந்த
ஐம்பொறிகளும் உறையும்
ஊருக்குத் (உடலுக்கு)
தலைவனாகவும் ஒருவன்
இருக்கிறானாம். நமது மனம்தான்
(அல்லது சித்தம்) இந்தத் தலைவன்!
தலைவன் வலுவாக இருந்தால்
ஐம்பொறிகளும், இந்தப்
பருவுடலும்
அவனுக்கு அடங்கி நடக்கும்.
தலைவன் வலுவற்றவனாக
இருக்கும் பட்சத்தில்
ஐம்பொறிகளும் தம் இச்சைக்குச்
செயல்படத் துவங்கிவிடும்.
உடலும் (ஊரும்) அந்தத் தலைவனின்
கட்டுப்பாட்டிற்குள் இராது.

இந்த மனம் எனும் தலைவன்
ஏறி வரும்
குதிரை ஒன்று உள்ளதாம். சித்தர்
இலக்கியங்க ளில் பல சங்கேத
மொழிகள் உபயோகத்தில் உள்ளன.
அவற்றுள் இந்த "குதிரை' என்பதும்
ஒன்று. வேகம், உறுதி,
இடைவிடாத ஓட்டம்
ஆகியவை குதிரையின்
தனிக்குணங்களாகும். குதிரைகள்
தூங்கும்போதுகூட
நின்று கொண்டேதான் தூங்கும்;
படுப்பதில்லை.
நோய்வாய்ப்படும்போது மட்டுமே குதிரைகள்
படுத்துக்கொள்ளும். இந்த
குணநலன்கள்
அனைத்துமே நமது மூச்சுக்
காற்றுக்கும் (பிராணன்)
பொருந்துகின்றன. எனவேதான்
சித்தர் இலக்கியங்களில் பல
இடங்களில்
மூச்சு அல்லது பிராணனைக்
குறிக்க "குதிரை' என்ற சங்கேதச்
(ரகசியம்) சொல்லை உபயோகப்
படுத்துகின்றனர்.
குதிரை அடிப்படையில்
ஒரு காட்டு விலங்கு. எளிதில்
கட்டுப்படாது.

ஒரு குதிரையைக் கட்டுக்குள்
கொண்டு வருவது என்பது மிகவும்
கடினமான ஒரு காரியம். அதில்
தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் பல
நாட்கள் போராடித்தான்
குதிரையை அடக்கி அதன் மேல்
ஏறி சவாரி செய்ய முடியும்.
ஒவ்வொரு முறையும் அதன் மேல்
ஏற முயற்சி செய்யும்போதும்
அது குப்புறத் தள்ளிவிடும்.
படிப்படியாகவே அதை அடக்க
முடியும்.

ஒருமுறை அதை அடக்கி வெற்றி கொண்டு சேணத்தைப்
பூட்டிவிட்டால், தனது வாழ்நாள்
முழுவதும் அந்தக்
குதிரை தனது எஜமானனுக்கு விசுவாசமுள்ள
துணையாக இருக்கும். மூச்சுக்
காற்றும் அவ்வாறே! அடக்குவதும்
ஆள்வதும் மிக மிகச் சிரமமான
காரியம். இந்த மூச்சு எனும்
குதிரை யாருக்கு அடங்கும்?
இறைவனின்
திருவடிகளையே பற்றிக்
கொண்டு மெய்ஞ்ஞான வழியில்
செல்லும்
மனிதர்களுக்கே (மெய்யர்க்கு) இந்த
குதிரை வசப்படுமாம்! உலக
மாயைகளில் சிக்கி, இறை நாட்டம்
கொள்ளாது வாழும்
பொய்யர்களை இந்த சண்டிக்
குதிரை கீழே தள்ளிவிடுமாம்.
இந்த ஒரு பாடலில் திருமூலர் பல
சூட்சுமமான
விஷயங்களை விளக்கியிருக்கிறார்.
அவற்றை சுருக்கமாகக் காண்போம்.

* ஐம்பொறிகளையும் ஆளும்
தலைவன்- சித்தம் (மனம்).

* இந்த மனம்
ஒருநிலைப்பட்டு உறுதியா னால்
மட்டுமே ஐம்புலன்களும்,
பருவுடலும் அந்த சித்தத்தின்
கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
இதுவரையில் படைப்பின்
சூட்சுமங்களை யும்
கரு உருவாவதில் இருக்கும்
ரகசியங்களையும்
குறித்து திருமூலரின் சில
கருத்துகளைக் கண்டோம்.
இனி வேறு சில சூட்சும ரகசியங்
களைக் காணலாம்.
பிணி, திரை, மூப்பு இல்லாத
வாழ்க்கை வேண்டும் என்பதே நீண்ட
நெடுங்காலமாக மனித குலத்தின்
ஆசையாக உள்ளது. அதற்கான
வழிமுறைகளைத் தேடும்
முயற்சிகளும் காலங் காலமாக
நடைபெற்று வருகின்றன. நவீன
மருத்துவ விஞ்ஞானமும் இதற்கான
விடையை முனைந்து தேடி வருகிறது;
இதுவரையில்
வெற்றி கிடைக்கவில்லை.

ஆனால் நமது முன்னோர்கள்
இதற்கான வழிமுறைகளைப்
பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்து விட்டனர்.
யோகாசனம், பிராணாயாமம்,
முத்திரைகள் என நம் முன்னோர்கள்
வகுத்து வைத்த வழிமுறைகள்
அனைத்துமே மூப்பு, திரை,
பிணி என அனைத்
தையுமே வெற்றி கொள்ளும்
மார்க்கங்களாகும்.

திருமந்திரத்தின் மூன்றாம்
தந்திரம் (மூன்றாம் பாகம்) முழுக்க
முழுக்க "அஷ்டாங்க யோகம்'
என்பதைக்
குறித்தே விவரிக்கிறது. பல
சூட்சும
ரகசியங்களை விளக்குகிறது.

"அஷ்டாங்கம்' என்ற வடமொழிச்
சொல்லுக்கு "எட்டு பிரிவுகள்'
என்பது பொருள். முழுமையான
யோகக்
கலையானது எட்டு அம்சங்களைத்
தன்னுள் கொண்டுள்ளது.

அவை முறையே-
1. இயமம்
2. நியமம்
3. ஆசனங்கள்
4. பிராணாயாமம்
5. பிரத்தியாகாரம்
6. தாரணை
7. தியானம்
8. சமாதி

இந்த ஒவ்வொன்றையும்
குறித்து மிக விரிவாக
திருமூலர்
தனது திருமந்திரத்தில்
விளக்கியுள்ளார்.
அவை அனைத்தையும் விவரிக்க
வேண்டுமென் றால் பல பாகங்கள்
கொண்ட ஒரு தனிப்
புத்தகமே எழுத
வேண்டியதிருக்கும்.

தற்போது "பிராணாயாமம்' எனும்
மூச்சுப்
பயிற்சி குறித்து திருமூலர்
கூறியுள்ள சில
உண்மைகளையும், சூட்சும
ரகசியங்களையும் மட்டும்
காணலாம்.
உயிருக்கு ஆதாரமாக
இருப்பது மூச்சுதான்.
எனவேதான் அதை "உயிர் மூச்சு'
என்கிறோம். மனிதன் உணவின்றி பல
நாட்கள் உயிர் வாழ முடியும். நீர்
இல்லாமற்கூட சில நாட்கள் உயிர்
வாழலாம். ஆனால்
காற்று (பிராணவாயு) இல்லாமல்
போனால் எட்டு நிமிடங்களில் ப்
மனதை இயக்குவது மூச்சுக்
காற்று (பிராணன்).

*இந்த மூச்சுக்
காற்றை வசப்படுத்து பவர்களுக்கு மட்டுமே மனம்
ஒருமுகப்படும்.

* இறைவனைப் பற்றிக்
கொண்டு மெய்ஞ் ஞான வழியில்
செல்பவர்களுக்கு மட்டுமே மூச்சு கட்டுப்படும்.

* பொய்ஞானம் எனும் மாயைகளில்
சிக்குண்டு உழலுபவர்களுக்கு மூச்சு,
மனம், ஐம்பொறிகள், பருவுடல்
ஆகிய எதுவுமே வசப்படாது.
முக்தி நிலையும்

இவர்களுக்கு சாத்தியப்படாது.
குருவின் துணை
நாம் பிறந்தது முதல்
இறப்பது வரையில்
ஒவ்வொரு நாளும்
ஏதாவது ஒன்றைப் புதிதாகக்
கற்றுக்கொள்கிறோம். பல
விஷயங்களைப் பிறர் சொல்லிக்
கொடுக்கக் கற்றுக்கொள்கிறோம்.
சிலவற்றை பிறரைப் பார்த்துக்
கற்றுக்கொள்கி றோம். இவை தவிர
சிலவற்றை இயற்கையை உற்று நோக்கியும்கூட
கற்றுக்கொள்கிறோம். புதிதாக
ஒன்றைக் கற்றுத்தரும்
ஒவ்வொருவருமே நமக்கு ஒரு குருதான்!

கல்விக்கு குருவின் துணை மிக
அவசியம். அதைவிடவும் ஞானத்
தேடலில்- ஞானம் தேடிய
பயணத்தில் ஒரு குரு மிக மிக
அவசியம். பிராணா யாமம் எனும்
மூச்சுப் பயிற்சியை முறையாகக்
கற்றுக்கொள்ள
ஒரு குரு கட்டாயமாகத் தேவை.
இதை கீழ்க்கண்ட திருமந்திரப் பாடல்
வலியுறுத்துகிறது.

"ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகு அறிவார்
இல்லை
கூரிய நாதன் குருவின் அருள்
பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.'
(திருமந்திரம்)

"மனம்' என்பதை "ஆரியன்' என்ற
சொல்லால் திருமூலர்
குறிப்பிடுகிறார். இந்த
மனமானது மிக நல்லதாம். இந்த
மனதிடம் இரண்டு குதிரைகள்
உள்ளதாம். முதல் பாடலில்
ஒரு குதிரை உண்டு எனக் கூறிய
திருமூலர் அடுத்த
பாடலிலேயே இரண்டு குதிரைகள்
உள்ளதாகக் கூறுகிறாரே,
இது என்ன முரண்பாடு என்ற
கேள்வி எழுகிற தல்லவா?
இங்கேதான் மூச்சு குறித்த
அடுத்த சூட்சும ரகசியம்
பொதிந்து கிடக்கிறது.

முதல் பாடலில் "குதிரை'
என்பது மூச்சு அல்லது பிராணனைக்
குறிக்கிறது. இந்தப் பாடலில்
அது நமது இடது நாசி,
வலது நாசி ஆகிய இரண்டையும்
குறிப்பதாக எடுத்துக் கொள்ளாம்.
இதுவே இரண்டு குதிரைகள்.
அல்லது இடது நாசி வழியாகச்
செல்லும் மூச்சுக்
காற்றை ஒரு குதிரை எனவும்,
வலது நாசி வழியாகச் செல்லும்
மூச்சுக்
காற்றை மற்றொரு குதிரை எனவும்
பொருள் கொள்ளலாம்.

பிராணன் என்பது ஒன்றுதானே?
வலது நாசியில் செல்லும்
மூச்சுக்கும், இடது நாசியில்
செல்லும் மூச்சுக்கும்
வித்தியாசம் இருக்க
முடியுமா என்ற கேள்வி உங்கள்
மனதில்
இப்போது எழுந்திருக்கும். ஆம்;
இரண்டு நாசிகளிலும் செல்லும்
மூச்சுக் காற்றுக்கு தனித்தனித்
தன்மைகளும், செயல்பாடுகளும்
உள்ளன. எனவேதான் திருமூலர்
அதைப் பாகுபடுத்திக் காட்ட
இரண்டு குதிரைகள் என்றார்.
நாம் நமது இரண்டு நாசித்
துவாரங்களின் வழியாகவும்
ஒரே நேரத்தில் சுவாசிப்பதாக
ஒரு தவறான
கருத்து நம்மிடையே உள்ளது.
உங்களது சுவாசத்தை உற்றுக்
கவனித்துப் பாருங்கள். இதிலுள்ள
உண்மை புரியும்.

ஒரு நேரத்தில் ஒரு நாசியின்
வழியாகவே அதிகப்படியான
காற்று உள்ளே செல்லும். (அடுத்த
நாசியில் மிகச் சிறய அளவிலான
காற்று உட்புகும்.)
சற்று நேரத்திற்குப்பின்
(இரண்டு மணி நேரத்திற்குப் பின்)
அடுத்த நாசி வழியாக
காற்று செல்லத் துவங்கும்.
இவ்வாறு ஒரு நாளில்
இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என
மொத்தம் 12 முறை இந்த இடம்
மாறுதல் நடைபெறும். எந்த
நேரத்தில் எந்த நாசியில்
காற்று செல்லும் என்பதையும் நம்
முன்னோர் கள்
கணித்து வைத்துள்ளனர்.

நேரம் நாசி

காலை 6-8
மணி வரை வலது நாசி.

காலை 8-10
மணி வரை இடது நாசி.

காலை 10-12
மணி வரை வலது நாசி.

மதியம் 12-2
மணி வரை இடது நாசி.

மதியம் 2-4 மணி வரை வலது நாசி.

மாலை 4-6
மணி வரை இடது நாசி.

மாலை 6-8
மணி வரை வலது நாசி.

இரவு 8-10 மணி வரை இடது நாசி.

இரவு 10-12
மணி வரை வலது நாசி.

இரவு 12-2 மணி வரை இடது நாசி.

இரவு 2-4 மணி வரை வலது நாசி.

அதிகாலை 4-6
மணி வரை இடது நாசி.

வலது நாசியின் வழியாக
உள்ளே செல்லும்
காற்றிற்கு சூரிய கலை என்றும்;
இடது நாசியின் வழியாக
உள்ளே செல்லும்
காற்றிற்கு சந்திர கலை என்றும்
நமது முன்னோர்கள் பெயர்
சூட்டியுள்ளனர். இந்த
இரண்டு சுவாசங்களுக் கும்
தனித்தனிப் பண்புகளும்
வெவ்வேறு வகையான
செயல்பாடுகளும் உள்ளன.
வலது நாசிக் காற்று (சூரிய கலை)

* உடலுக்குத் தேவையான வெப்ப
சக்தியைத் தருகின்ற பிராணன்
இதுவே.

* வலது நாசியின் வழியாக
சுவாசம் நடைபெறும்
காலகட்டத்தில் உடலின் வெப்ப
நிலை சற்றே உயரும்.

* உடல் சுறுசுறுப்படையும்;
சோர்வு அகலும்.

* உடலின் வலிமை அதிகரிக்கும்.
* மூளையும் உடலும் பரபரப்பாக
இயங்கும்.

* இந்த இரண்டு மணி நேரத்தில்
நிதானம் குறைவாகவும், வேகம்
அதிகமாகவும் இருக்கும்.

இடது நாசிக் காற்று (சந்திர கலை)
* உடலைக் குளிர்விக்கும்
தன்மை கொண்டது.

* சந்திரனைப் போன்றே இந்த
மூச்சுக் காற்றும்
குளுமையானதாகும்.

* இடது நாசி வழியே சுவாசம்
நடைபெறும் வேளையில் உடலின்
வெப்ப நிலை சற்றே குறைந்து,
உடல் குளிர்ச்சியடையும்.

* பரபரப்புத் தன்மை குறைந்து,
மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத்
தன்மை உருவாகும்.

* மூளை அமைதியாக சிந்திக்கத்
துவங்கும்.

* அவசரத் தன்மை மறைந்து,
நிதானமான மனநிலை நிலவும்.
இந்த இரண்டு வகையான
மூச்சுகளையும்
(குதிரைகளையும்) அடக்கி ஆளக்
கற்றுக் கொண்டால், மனம்,
ஐம்பொறிகள், பருவுடல் ஆகிய
அனைத்துமே நம்
கட்டுப்பாட்டிற்குள் வரும். ஆனால்
இவற்றை அடக்கும் சூட்சுமம்
எவருக்கும்
தெரிவதில்லை என்பதையே இந்தப்
பாடலின்
இரண்டாவது வரி தெரிவிக்கிறது.

"வீசிப்பிடிக்கும் விரகு (உபாயம்,
வழிமுறை) அறிவார் இல்லை.'
இந்த சூட்சுமங்களைக்
கற்றுக்கொண்டு, பிராணன் எனும்
குதிரைகளை வசப்படுத்த
ஒரு குருவின்
துணை வேண்டும். அந்த
குருவும்
நுண்ணறிவு படைத்தவராக, அந்தக்
கலையில் முழுமை பெற்றவராக
இருத்தல் வேண்டும். இந்தக்
கருத்தே கடைசி இரு வரிகளில்
வெளிப் படுகிறது.

"கூரிய நாதன் குருவின் அருள்
பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.'
இதில் "அருள் பெற்றால்' என்ற
சொற்களிலும் ஒரு சூட்சுமம்
உள்ளது. குருவிடம்
சென்று கற்றுக்கொள்வது வேறு;
அவரது அருளைப்
பெறுவதென்பது வேறு.
நீங்களே இதை ஆழமாகச்
சிந்தித்துப் பாருங்கள். இதிலுள்ள
சூட்சும ரகசியங்கள் புரியும்.