வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Tuesday, June 30, 2015

அருள் விளக்கங்கள்           உனக்குள் உள்ளது சக்தி                


                                                                      7 - சகஸ்ராரம்
                                                                      7 - சகஸ்ராரம்

அமைப்பு : ஆயிரம் தாமரை இதழ்கள் கொண்ட ஊதா நிறத்துடன் அடர் பொன்னிறம் கொண்ட ஜோதிர் லிங்கத்தை மையத்தில் கொண்டது.

இடம் : உச்சந்தலை

பலன்கள் : இந்தச் சக்கரம் நன்கு மலர்ந்தால், பிரபஞ்ச உணர்வுடன், முழுமையாக ஒன்றுபடுத்தும் நிலைக்கு இட்டுச் செல்லும்.

சம்பந்தப்பட்ட உறுப்புகள் : மூளை

பீஜமந்திரம் : ஓஹும் சத்யம் ஓம்


                                                                        6 - ஆக்ஞா

                                                                        6 - ஆக்ஞா

அமைப்பு : இரண்டு தாமரை இதழ்கள் கொண்ட கருநீல நிறத்தையும், முறையே இதழின் வலது பக்கம் சுரியனையும், இதழின் இடது பக்கம் சந்திரனையும், நடுவில் நீல நிற லிங்கத்தையும் கொண்ட சக்கரமாகும்

இடம் : புருவ மத்தியில்

பலன்கள் : சூரிய சந்திர சக்திகளை ஒன்றுபடுத்தி, இந்த சக்கரத்தின் மீது தொடர்ந்து தியானம் செய்வது, ஞாபக சக்தியை அதிகப்படுத்தி, விழிப்புணர்வையும், ஒருமுகப்படுத்தும், தன்மையையும் மலர்ச்செய்யும்.

சம்பந்தப்பட்ட உறுப்புகள் : கண்கள், நெற்றியின் கீழ்ப்பகுதி

பீஜமந்திரம் : (ॐ)ஆ... உ... ம்


                                                                    5 - விஷூத்தி

                                                                      5 - விஷூத்தி

அமைப்பு : பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட, உள்ளே நீல நிறத்தையுடைய அடர் நீலம் கொண்ட சக்கரமாகும்.

இடம் : தொண்டை

மூலக்கூறு : ஆகாயம்

பலன்கள் : சரணாகதியை வெளிக்கொணரும். மறைவான ஆத்மசக்தியின் பரிமாணத்தைத் திறக்கச் செய்யும். புனிதத்துவம் வளரும்.

சம்பந்தப்பட்ட உறுப்புகள் : தொண்டை, நுரையீரல்

பீஜமந்திரம் : ஹங்


                                                                     4 - அனாஹதம்

 
                                                                   4 - அனாஹதம்

அமைப்பு : பன்னிரண்டு தாமரை இதழ்கள் கொண்ட பச்சை நிறத்துடன் கூடிய இந்தச் சக்கரத்தின் மையத்தில் காணப்படும் அறுகோணவடிவத்தில் பிரகாசமாக ஒளிவீசும் பொன்னிற ஜோதியைக் கொண்டது.

இடம் : மார்பின் நடுவில் 

மூலக்கூறு : காற்று

பலன்கள் : அன்பு, இரக்கம், உணர்வு, இவற்றின் மூலம் உறவுகள் சீராகும்.

சம்பந்தப்பட்ட உறுப்புகள் : இதயம்

பீஜமந்திரம் : யங்


                                                                     3 மணிபூரகம்

                                                                       3 மணிபூரகம்                                                        

அமைப்பு : பத்து இதழ்கள் கொண்ட பிரகாசமான மஞ்சள் நிறத்தாமரை. நெருப்பு ஜ்வாலையை (ஜட்டராக்னி) மையத்தில் கொண்டது இந்தச் சக்கரம்.

இடம் : தொப்புள்

மூலக்கூறு : நெருப்பு

பலன்கள் : உடல் சக்தியையும், மிக்க ஆரோக்கியத்தையும் தீவிரப்படுத்தி விழிப்படையச் செய்கிறது.

சம்பந்தப்பட்ட உறுப்புகள் : வயிறு, கல்லீரல், சிறுகுடல், மண்ணீரல்

பீஜமந்திரம் : ரங்


                                                                   2 - சுவாதிஷ்டானம்
2 - சுவாதிஷ்டானம்

அமைப்பு : ஆறு இதழ்கள் கொண்ட ஆர்ஞ்சு நிறத்தாமரை, உள்ளே சாம்பல் நிற பிறைச் சந்திர வடிவைக் கொண்டது இந்தச் சக்கரம்.

இடம் : பிறப்புறுப்புக்கு மேல்

மூலக்கூறு : நீர்

பலன்கள் : சுயக்கட்டுப்பாட்டையும், நுண்ணுணர்வையும் அதிகரிகச் செய்யும்.

சம்பந்தப்பட்ட உறுப்புகள் : கர்ப்பப்பை, பிறப்புறுப்புக்கள், பெருங்குடல்

பீஜமந்திரம் : வங்


1 - மூலாதாரம்,1 - மூலாதாரம்
1 - மூலாதாரம்

அமைப்பு : நான்கு இதழ்கள் கொண்ட, சிவப்பு நிறத்தாமரை. கறுப்பு நிறலிங்கத்தை மூன்றரைச் சுற்றுக்கள் சுற்றப்பட்ட பொன்னிறகுண்டலினி சர்ப்பத்தை மையத்தில் கொண்டது.

இடம் : பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடையில்

மூலக்கூறு : பூமி

பலன்கள் : குண்டலினி சக்தியை விழிப்புறச் செய்தல், ஸ்திரத்தன்மையையும், உயிர் ஆற்றலையும், அதிகரிக்கச் செய்யும்.

சம்பந்தப்பட்ட உறுப்புகள் : சிறு நீரகம், சிறு நீரகப்பை

பீஜமந்திரம் : லங்                                                         


Friday, June 26, 2015

அருள் விளக்கங்கள்                                             


பத்து முத்திரைகள்:
*******************************
“முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும் முழு உடலை கொண்டும் முத்திரை காட்டப்படும். புத்தர் பல முத்திரைகளை கையாண்டிருப்பதை அவருடைய சிலைகளில் காணலாம்.
பரத நாட்டியத்தில் 200-க்கும் மேற்பட்ட முத்திரைகளும், மோகினி ஆட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட முத்திரைகளும்கையாளப்படுகிறது. தாந்தீரிகத்தில் 108 முத்திரைகள் உள்ளன. அன்றாட நம் உடல் ஆரோக்கியத்திற்கு கீழ்க்கண்ட 10 முத்திரைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன..
1. கட்டைவிரல் – தீ
2. ஆள்காட்டி விரல் – காற்று
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – நிலம்
5. சுண்டுவிரல் – நீர்

இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.

1. அறிவு முத்திரை:
*****************************
ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் அழுத்தம் கொடுக்கும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். இந்த முத்திரையை நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலையிலும் செய்யலாம். அறிவை கூர்மையாக்கி நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கமின்மையை போக்கும். கோபம் குறையும்.
2. வாயு முத்திரை:
*****************************
ஆள்காட்டி விரலை கட்டை விரல் அடியில் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை 24 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும்.

3. சூன்ய முத்திரை:
******************************
நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வை இது நிவர்த்தி செய்யும். தினமும் 40 முதல் 60 நிமிடங்கள் செய்ய வேண்டும். காது தொடர்புடைய நோய்களை இந்த முத்திரை கட்டுப்படுத்தும்.

4. பூமி முத்திரை:
***************************
மோதிர விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். சோர்வை இது குறைக்கும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். சோர்வான எடை குறைந்தவர்களுக்கு உடல் எடை கூடும். மேனி அழகை கூட்டி பளபளப்பாக்கும். உடலை சுறுசுறுப்பாக்கி ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும்.
நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும் – மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வின்மையை இது நிவர்த்தி செய்யும். தினமும் இப்படி 40 முதல் 60 நிமிடங்கள் செய்து வந்தால் நோய் குணமாகும். காது வலியை 4 அல்லது 5 நிமிடத்தில் குணமாக்கும். காது கேளாதோர் மற்றும் மூளை பாதிக்கப்பட்டோர்க்கு இந்த முத்திரை உதவும். பிறவி நோயாக இருந்தால் பயன் தராது.

5. வாழ்வு முத்திரை:
********************************
சின்ன விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். பெயருக்கு ஏற்றார்போல் வாழ்வின் சிறப்பிற்கு வகை செய்யும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும். சோர்வு நீங்கும். கண்பார்வை சிறப்பாகும்.
6. ஜீரண முத்திரை:
நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனியின் மூலம் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பயிற்சி தரவும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்றவற்றை சீராக்கும்.

7. இதய முத்திரை:
*****************************
நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகள் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். ஆள் காட்டி விரல் நுனி கட்டைவிரலின் அடியை தொட வேண்டும். சின்ன விரல் மட்டும் நேராக இருக்க வேண்டும். இது இதய நலத்துக்கு சிறந்தது. இதய நோய் உள்ளவர்கள் தினமும் இருமுறை தலா 15 நிமிடம் செய்தால் பலன் தெரியும்.
8. சூரிய முத்திரை:
மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். தைராய்டு சுரப்பியை தூண்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. தினமும் இரு முறை 5 முதல் 15 நிமிடங்கள் பயிற்சி தரலாம். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். நிம்மதியின்மை, ஜீரணமின்மை போன்ற குறைபாட்டை களைய வகை செய்யும்.

9. நீர் முத்திரை:
***************************
சின்ன விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும். இதனை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஜீரண கோளாறு மற்றும் சதை பிடிப்புகள் வராது.

10. லிங்க சக்தி முத்திரை:
****************************************
இரு கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்து கொள்ளவும். இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் நேராகவும் வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும். இது உடலில் உஷ்ணத்தை தரும். எனவே இதை பயிற்சி செய்யும்போது நெய், அதிக நீர் மற்றும் பழ ரசம் பருகவும். இதை அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில் இந்த முத்திரை குளிர் காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும். கபம் மற்றும் சளி போன்ற சுவாச சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த வல்லது.

இந்த முத்திரைகளை செய்து உங்களில் மாற்றம் ஏற்படுகிறதா என்று பாருங்க நண்பர்களே, கண்டிப்பா மாற்றம் வரும்
 —   

Thursday, June 4, 2015

அருள் விளக்கங்கள் 


வள்ளுவம் கூறும் கடவுள் வாழ்த்து 

திருக்குறள் திருவள்ளுவர் இயற்றிய ஆயிரத்துமுன்னூற்று முப்பது பாடல்களில் அவர் மக்கள் மனதிற்கு இதம் தரும் வாசகங்களாக

பொருள்பல கூறும் குறுகிய குறளாக எடுத்து இயம்பி உள்ளார். அதில் கீழே குறிப்பிட்டுள்ள குறள்கள் ஐந்தும் கடவுள் வாழ்த்தில் வரும் பாடல்கள்.

"அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு"

அகரம் எனப்படும் அ எழுத்து எழுத்துக்கெல்லாம் முதன்மையானது அதே போல் இறைவன் எமக்கு எல்லாம் முதன்மையானவர் அவரை வழிபட்டு எமது காரியங்களை ஆற்றத்தொடங்க வேண்டும். இவ் உலகிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குபவரும் இறைவன்.

"கற்றதனால் ஆய பயனென் கொல்வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின்"

கற்றகல்வி பயன் ஆக வேண்டுமெனின் உண்மை அறிவாக விளங்கும் இறைவனின் தூய திருவடிகளைத் தொழுதலே கற்றதன் பயனாகும்.

"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார்."

அன்பர்களின் இதயமலரில் குடிகொண்ட இறைவனை இடைவிடாது துதிசெய்பவருக்கு அவர்கள் இப்பூவுலகில் நீடூழி வாழ அருள் புரிவார்.

"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல"

விரும்புதலும் வெறுத்தலும் இல்லாத இறைவனின் திருவடிகளை எப்போதும் துதிப்பவர்க்கு என்றும் எங்கும் எத்துன்பமும் இல்லை.

"இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு"

இறைவனின் உண்மைப்பொருளை புரிந்து கொண்டு அவரை விரும்புகிறவர்களின் அவர்கள் அறிவை மயக்கி இருள் தருகின்ற நல்வினை தீவினை இருவினைகளும் அணுகி துன்பம் செய்யாது.

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கற்றகல்வி தமிழ் மொழியில் அகரம் அடிப்படையானதன் அவசியம் முதல், இறைவன் அகிலத்தை தோற்றுவித்ததில் அவருக்கு நாம் கடமைப் பட்டுள்ளதை திருவள்ளுவர் எடுத்துக் கூறிய விதமும் எல்லாவற்றுக்கும் அடிப்படையான இறைவன் ஆதி தலைவன் அவனது அரும் சக்தி எமது வாழ்க்கை மேம்பட எவ்வளவு தேவை என்பதையும் அழகாக சொல்லியுள்ளார்.

அடுத்து கடவுள் வாழ்த்தின் ஏனைய குறள்கள் ஐந்தும் மனிதனை புனிதனாக்குவதற்கு முடிவுறும் வாழ்க்கை முடிவடையாத இறைவனின் பால்நாம் செலுத்துவதால் ஏற்படும் நன்மைகள் எவை என்பதை வழியுறுத்துகின்றன. அவற்றையும் இங்கு காண்போம்.

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார்"

ஐம்பொறிகள் மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐந்தின் தாகங்களை அவித்தழித்த இறைவனின் பொய்களற்ற ஒழுக்க நெறிகளை முறையோடு ஒழுகுபவர் நிலைத்து வாழ்வர்.

"தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது"

தனக்குவமை இல்லாதவன் இறைவன் ஒப்புயர்வு அற்ற அவன் பாதங்களை பணிபவர்களைத் தவிர மற்றவர்க்கு அவர்கள் துன்பச்சுமைகளை மாற்றுவது இயலாது.

"அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தாற்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது"

அறக்கடலாக திகழும் இறைவனின் திருவடிகளை எண்ணிச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் எளிது. பொருட்கடல் இன்பக்கடல் வேறு எந்த மாகடலையும் நீந்திக் கரையேறுவது இறைவனை வழிபடாதவர்க்கு அரிது.

"கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை"

கொள்கைகள் அற்ற உணர்ச்சிகளை உணராத ஐம்பொறிகள் இருந்தும் பயனற்றவை. அதுபோல் எண்குணங்களை உடைய இறைவன் திருவடிகளை வணங்காத தலைகளும் பயனற்றவை.

"பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்"

பிறவி எனும் பெரும் கடலை நீந்திக் கரையேற இறைவனின் பாதங்களை எண்ணித் துதிக்க வேண்டும். இல்லாவிடில் பெரும் துன்பக்கடலில் நீந்தி கரையேற முடியாது தவிக்க நேரிடும்.

''அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத்தரித்த குறள்'' ஆமாம் எவ்வளவு அழகாக ஒளவைப் பாட்டி திருவள்ளுவர் பாடிச்சென்ற திருக்குறளுக்கு விளக்கம் அளித்து இருக்கிறார். அணு மிகச்சிறியது. அதைத்துளை போட்டு அதற்குள் ஏழு கடல்களை அடக்கி இருப்பது போல் அவர் இயற்றிய குறளும் அதன் பொருளும் இருப்பதை சுருக்கமாக ஒளைவையார் கூறியுள்ளதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

குறள் ஒன்றேமுக்கால் அடி அதன் பொருள் பல அடிகளை தாண்டி செல்கிறது. உண்மைதான் திருவள்ளுவர் எப்படி அழகாக அமைதியாக அன்பாக அரவணைப்பாக ஆழமாக கடவுள் வாழ்த்தில் கூறியிருக்கிறார். இறையன்பு எத்தகையது ,எமக்கு அவரது சக்தி எவ்வாறு உதவி செய்யும், எந்நேரத்திலும் எமக்கு உறுதுணை புரியும் என்பதை திருவள்ளுவர் போல் இவ்வளவு சுருக்கமாக குறளும், விளக்கமாக பொருளும் கூறி விட யாரால் முடியும். சிந்தை தெளிவடைய திருக்குறள் படிப்போம்.