வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Monday, December 1, 2014

பொன்மொழிப் புதையல் !! அருள் விளக்கங்கள் 17

பொன்மொழிகள் :: அருள் விளக்கங்கள்!!!

படித்ததில் பிடித்தது பகிர்ந்து  சொல்லுவோம் 

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...

சோம்பல் அனைத்தையும் கடினமாக்கும். சுறுசுறுப்பு அனைத்தையும் எளிதாக்கும் - ஜப்பான்.
 
சவால்கள் வரும்போதுதான் நீங்கள் நினைத்தே பார்த்திராத திறமைகள் உங்களிடம்   ஒளிந்திருப்பதைக் கண்டுகொள்வீர்கள் - டாரா ஆல்பர்ட்.


இதயம் மட்டும் உறுதியாக இருந்தால் எலியால்கூடப் பெரிய சாதனைகளைச் செய்ய  முடியும் - கிரேக்கம்.

உலகமே என் கோயில். நன்மை செய்வதே என் மதம் - ஹீன்.

அன்பு நிறைந்த இன்சொல், இரும்புக் கதவைக்கூடத் திறக்கும் - ஜான் கீட்ஸ்.

உங்கள் பேச்சைக் கொண்டுதான் உங்கள் அன்பு மதிக்கப்படும். 
உங்கள் அன்பைப்போலத்தான் உங்கள் நடத்தை இருக்கும். 
உங்கள் நடத்தையைப்போலத்தான் இருக்கும் உங்கள் வாழ்க்கை - சாக்ரடீஸ்.

சான்றோர்களுக்கு அளிக்கும்  கவ்வுரவம் கடவுளுக்குச் செய்யும் மரியாதையாகும் - நபிகள் நாயகம்.

ஒரு பகைவனால் ஏற்படும் தீமையைவிட, அடக்கம் இல்லாத மனமே ஒருவனுக்கு அதிகமான தீமையைச் செய்கிறது - புத்தர்.
 
தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு வேறு விரோதிகளே தேவையில்லை - ஃபிராங்கிளின்.

எவரால் மனித இனத்திற்கு நன்மை ஏற்படுகிறதோ அவரே மனிதரில் சிறந்தவர் - நபிகள் நாயகம்.
 
சகிப்புத் தன்மையும், விடா முயற்சியும், அறிவுத் திறனும் எந்த நாளிலும் ஒருவனைத் தாழவிடாது - சார்லஸ் ஸ்மித்

மரங்கள் எல்லோருக்கும் நிழல் கொடுக்கின்றன. தங்களை வெட்டும் மரம் வெட்டிக்குக்கூட - பிரெஞ்சு

தனக்குத் தெரிந்ததைத் தெரிந்தது என்றும், தெரியாததைத் தெரியாது என்றும் கூறுவதே அறிவாகும் - கன்பூசியஸ்

விவசாயி ஏழை என்றால் அந்த நாடும் ஏழைதான் - போலந்து

அதிகாலை எழும் பறவை அதிக தூரம் செல்லும் - செக்கோஸ்லோவியா

பறவைகளுக்கு இரை தயாராக இருக்கிறது. ஆனால் அது கூட்டுக்குள் கொண்டுவந்து கொடுக்கப்படுவதில்லை - இங்கிலாந்து

மலை புயலுக்கு அசைந்து கொடுப்பதில்லை. மாமனிதர்கள் புகழ்ச்சிக்கு  அடிமையாவதில்லை - புத்தர்

உன்னுடைய  உயர்வு உன் நாக்கின் நுனியில்தான் உள்ளது - துருக்கி

பகைவரின் அங்கீகாரம்தான், ஆதரவாளர்கள் புகழ்வதைவிடச் சிறந்தது - சீக்கியப் பொன்மொழி

நல்ல நண்பன் நூறு உறவினர்களுக்குச் சமம் - பிரான்ஸ்
 
நல்ல புத்தகங்களைப் போன்ற நம்பிக்கை இந்த உலகத்தில் இல்லை - ஆங்கிலப் பழமொழி

என் மனம் விரும்பும் நூல்களைக் கொடுங்கள். வாழ்நாள் முழுதும் சிறையில் வாழச் சம்மதிப்பேன் - மாஜினி

பயன்படுத்தப்படாத புத்தகம் வெறும் காகிதக் கட்டுதான் - சீனப் பழமொழி

நான் தெரிந்துகொள்ள வேண்டியவை புத்தகங்களில் இருக்கின்றன. நான் படிக்காத நூல் ஒன்றை எனக்குத் தருபவர்களே எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் - ஆபிரகாம்லிங்கன்

அக்கறை உள்ள பெற்றோரும், அலமாரி நிறையப் புத்தகங்களும் வாய்க்கப்பெறும் குழந்தையே அதிர்ஷ்டசாலி - ஜான்மெக்காலே

ஒரு நல்ல படிப்பாளி கொஞ்சம் விஷயங்களைப் பற்றியாவது முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். பல விஷயங்களைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும் - மார்க்ஸ் அரேலியஸ்

மூடத்தன நோயை முற்றாக விரட்டும் மூலிகைகளே புத்தகங்கள் - சீனப் பொன்மொழி

ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை - சிசரோ

நூலகம் இல்லாத ஊரை நான் ஒரு ஊராக மதிப்பதே இல்லை - மாமேதை லெனின்

எந்த வீட்டில் நூல் நிலையம் இருக்கிறதோ, அந்த வீட்டில்தான் ஒளிவிளக்கு இருக்கிறது - பிளாட்டோ.
 
கடவுள், தான் எங்கும் இருக்க முடியாது என்பதற்காகத்தான் அம்மாவைப் படைத்தார் - நபிகள் நாயகம்

வாழ்க்கை ஒரு போர்க்களம். நம்பிக்கைதான் ஆயுதம்- மகாவீரர்

உங்களைவிட உயர்ந்தவர்களிடமும், உங்களுக்குச் சமமானவர்களிடமும் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள். ஆனால், அதைவிட முக்கியம் உங்களை விடக் கீழான நிலையில் இருப்பவர்களிடம் காட்டும் நேர்மைதான் - சாக்ரடீஸ்

பலவீனர்கள் பிறரை மன்னிக்கமாட்டார்கள். மன்னிப்பது என்பது வலிமையுடையோரின் குணம் - மகாத்மா காந்தி

வாழ்க்கை என்பது ஒரு துணிவு மிக்க வீரச் செயல்- ஹெலன் கெல்லர்

வாழ்க்கையில் நீங்கள் அதிகம் பெற விரும்பினால் முதலில் நீங்கள் அதிகமாகக் கொடுங்கள் - ஸ்டோன்

இரக்கத்தை அறிந்தவன் எல்லாம் அறிந்தவன் - பிரெஞ்சு

எந்தவொரு மெழுகுவர்த்தியும், இன்னொரு மெழுகுவர்த்தியை ஏற்றுவதால் அணைந்துவிடுவதில்லை. எனவே பிறருக்கு உதவுவதை நிறுத்திவிடாதீர்கள். ஏனெனில் அது ஒன்றுதான் உங்கள் வாழ்க்கையை அர்த்தமுடையதாக்கும் - அன்னை தெரசா

எந்த ஒரு செயலையும் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு செய்கிறபோது, மிகப் பெரிய வேலைகளும் நமக்கு எளிதாகிவிடும் - ஹென்றி போர்டு

மனிதன் தன் பெரும்பாலான துன்பங்களை தன் பேச்சின் மூலமாகத்தான் தேடிக்கொள்கிறான் - அரேபியா
 
ஒட்டடைக் குச்சி ஓய்வு எடுத்துக்கொண்டால் சிலந்திப் பூச்சி சிம்மாசனம் ஏறும் - தமிழ்நாடு

அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது - கன்பூசியஸ்

அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக்கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும் - எமர்சன்

பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது. கடல் பழையது; மழை புதியது - இந்தோனேசியா

கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்காமல் கடினமாக உழைத்ததால்தான் என்னால் புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது - தாமஸ் ஆல்வா எடிசன்

சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும் - செனாக்கா

உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது - ஜார்ஜ் எலியட்

நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது - கார்ல் மார்க்ஸ்

கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள் - ஜி. டி. நாயுடு

சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் நமக்கு வேண்டும் - நேரு

எத்தனைப் படிகள் என்று மலைக்காதீர்கள். எல்லாப் படிகளும் கடக்கக்கூடியவையே! - ராமலிங்க வள்ளலார்.

நமது நாக்கு மிகச் சிறிய உறுப்பாக இருந்தாலும், மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. சிறு தீப்பொறி பெருங் காட்டையே கொளுத்தி

விடுவதைப்போல, நம் நாவிலிருந்து வரும் தவறான ஒரு வார்த்தை நம் வாழ்க்கையையே வீணாக்கிவிடும் - விவிலியம்.

தனக்காக வாழ்வது என்பது இறகைவிட லேசானது. பிறருக்காக வாழ்வது மலையைவிடப் பளுவானது. அந்தப் பளுவைச் சுமக்கத் தயாரானவனே சவாலான வாழ்க்கையை வாழ்கிறான் - மாவோ.

ஜாதகத்தையும், ஜோதிடத்தையும் நம்பி அதில் வாழ்க்கையைத் தேடாதீர்கள்! நல்ல வாழ்க்கை என்பது கடும் உழைப்பின் பின்னால் மறைந்திருக்கிறது - நேரு.

நேற்று என்பது உடைந்த பானை. இன்று என்பது கையில் உள்ள வீணை. நாளை என்பதோ, மதில் மேல் பூனை. எனவே இன்று இருக்கக்கூடிய வீணை என்னும் காலத்தை நற்செயல்கள் என்னும் விரல்களால் மீட்டி நல்லிசை பிறக்கச் செய்யுங்கள்! - இந்தியா

ஆற்றலைவிட ஆர்வமே வெற்றிக்கு அடிப்படைக் காரணமாகும் - சார்லஸ் பக்ஸ்டன்.

பசித்தோருக்கு உணவிடுவதே என் மதம். வறியவரிடமும், பாமரரிடமும் அன்புடன் பழகுபவரே என் கடவுள் - விவேகானந்தர்.

சோம்பேறிகள் முன்னால் வைரத்தைக் கொட்டினாலும் கடைக்கு எடுத்துச் சென்று விற்கவேண்டுமே என்று அழுவார்கள் - அரேபியா.

சம்பாதிப்பதால் ஒருவன் பணக்காரன் ஆவதில்லை. சேமித்து வைப்பதால்தான் அந்த நிலையை அடைகிறான் - பின்லாந்து.

சிறிய புண்களையும், ஏழை உறவினர்களையும் ஒருபோதும் அலட்சியம் செய்யாதீர்கள் - ஸ்வீடன்.
 
எந்தக் கப்பலும் துறைமுகத்தில் பாதுகாப்பாகவே இருக்கும். ஆனால், அதற்காகக் கப்பல் கட்டப்படுவதில்லை. கடலில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு பயணம் செய்வதற்காகத்தான் கப்பல் தயாரிக்கப்படுகிறது - கிரேஸ் முர்ரே ஹாப்பிர்

மிக அதிகமானவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன்தான் மிகவும் மகிழ்ச்சியான மனிதன் - திதெரோ

துன்பம் ஒரு பழம்போன்றது. தாங்க முடியாத மெல்லிய கிளையில் கடவுள் அதை வளரச் செய்வதில்லை - உய்கோ

ஒரு மாவீரனையும், ஒரு பெரிய மனிதனையும் எடைபோட்டால் - அவர்கள் ஒரு நல்ல மனிதனுக்குச் சமமாக மாட்டார்கள் - லபுருயேர்

இந்த உலகத்தில் நாம் செய்யும் மிகவும் நல்ல பயணம், ஒருவரை நோக்கி ஒருவர் செல்வதுதான் - போல் மொரானோ

மற்றவர்களை ஒதுக்கிவிட்டு எவனும் தன்னை உயர்த்திப் பேச முடியாது -  சுல்லி புருய்தோம்

குற்றவாளி சட்டத்திற்கு அஞ்சுகிறான். நல்ல மனிதன் தன் மனசாட்சிக்கு அஞ்சுகிறான் - உய்கோ

தீயவன் மட்டுமே தனியாக இருப்பான் - திதெரோ

கற்றறிந்த மனிதன் என்று யாருமில்லை, கற்கும் மனிதர்கள்தான் உள்ளனர் - மரே ஷால்

இந்த உலகில் உண்மையானதாக, ஆழமானதாக, என்றும் கெட்டதாக மாறாததாக ஒன்றே ஒன்றுதான் உள்ளது... அம்மாவின் அன்புதான் அது - அலெக்சாந்தர் துய்மா

உங்களுக்கு உதவக்கூடிய கரங்கள் வேறெங்குமில்லை. அவை உங்கள் தோள்களின் மீதுதான் இருக்கின்றன - லிடர்மென்

அனுபவங்கள் எல்லோருக்கும்தான் ஏற்படுகின்றன. ஆனால் அந்த அனுபவங்களால் ஏற்பட்ட படிப்பினையை மறக்காதிருப்பவரே முன்னேற்றமடைகிறார் - ஆல்டல் ஆக்ஸ்லி

சிறந்த செயல்களே சிறந்த வழிபாடு - குருநானக்

உயிருள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன். உழைக்க உழைக்க எனக்கு உயிர் வாழும் விருப்பம் அதிகமாகிறது - ஜார்ஜ் பெர்னாட்ஷா

நாம் செய்யும் வேலை என்பது பிரார்த்தனைக்குரியது. நாம் எவ்வாறு முழுமனத்துடன் பிரார்த்திக்கிறோமோ, அதேபோன்று வேலையிலும் ஈடுபடவேண்டும் - தாமஸ் ஆல்வா எடிசன்
 
பயன்படுத்தாத இரும்பு துருப்பிடித்துவிடும். தேங்கிய நீர் தூய்மையிழந்து விடும். சுறுசுறுப்பான செயல்பாடுகளற்று முடங்கிய மனம் தன் வலிமையை இழந்துவிடும் - லியனார்டோ டாவின்ஸி

இந்த மண்ணில் வாழ்வதற்கு நாம் வாடகை தரவேண்டும். சக மனிதர்களுக்கு நாம் செய்யும் தொண்டுதான் அந்த வாடகை - வில்பிரட் கிரென்வெல்ட்

கடமையைச் செய்யும்போது மகிழ்ச்சியாகச் செய்யவில்லையென்றால், அதன் முடிவும் மகிழ்ச்சியாக இருக்காது - நெப்போலியன் ஹில்

நான் துப்புரவுத் தொழிலாளியாக இருந்தாலும்கூட அந்த வேலையிலும் நானே சிறந்த துப்புரவுப் பணியாளனாக இருப்பேன் - விவேகானந்தர்

நான் சந்திக்கின்ற மனிதர்களிடமிருந்தெல்லாம் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று மிகவும் விரும்புகிறேன் - எமர்சன்
எங்கும் இருள் என்பது கிடையாது. அறியாமைதான் இருள். அந்த அறியாமை இருளை விரட்ட நாம் உலகமெங்கும் அறிவொளியைப் பாய்ச்சுவோம்- இங்கர்சால்  

இயற்கையில் இருப்பதெல்லாம் கலைகளில் உள்ளன - உய்க்கோ  

சமுதாயம் என்பது மனிதர்களின் ஒற்றுமைதான் - ரூசோ  

தன்னால் இயன்றதைச் செய்பவன் வீரன். மற்றவர்கள் அதைச் செய்வதில்லை - ரோமென் ரொலான்  

சிறிய வேலைகளில் அலட்சியம் காட்டுவதால்தான் நாம் பெரிய தவறுகளைச் செய்யக் கற்றுக்கொள்கிறோம் - மதாம் நெக்கேர்  

இந்தச் சிக்கல் கடினமானது என்று சொல்லாதீர்கள். கடினமாக இல்லாவிட்டால் அது சிக்கலே இல்லை - ஃபோஷ்.

வாசிப்பு என்பது மகிழ்ச்சியான உலகத்தின் பக்கம் திறந்து வைக்கப்பட்ட கதவாகும் - மொரியாக்  

கடந்த காலம் உடைந்த முட்டை. எதிர்காலம் அடைகாக்கப்படும் முட்டை - போல் எலுயார்  

நாம் நான்கு வழிகளில் காலத்தை இழக்கிறோம்: ஒன்றும் செய்யாமல் இருத்தல், செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருத்தல், தவறாகச் செய்தல், காலமற்ற காலத்தில் செய்தல் - வொல்தேர்  

உயர்ந்த உள்ளங்களின் இரக்க குணமே கருணை - ஷாம்ஃபோர்
எனக்குப் பின்னே வராதே... நான் வழிகாட்டி அல்ல; எனக்கு முன்னே போகாதே... நான் பின்பற்றுபவன் அல்ல; என்னோடு நட... எனக்கு நண்பனாக இரு!  -ஆல்பர்ட் காம்யு

நட்பு என்பது பள்ளிக்கூடத்தில் கற்பது; நட்பின் அர்த்தம் புரியவில்லை என்றால் பள்ளிக்கூடத்தில் நீ ஒன்றுமே கற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம்!  -முகம்மது அலி

நான் நிலை மாறும்போது நிலை மாறுபவனும், நான் தலையாட்டும்போது தலையாட்டுபவனும் எனக்கு நண்பன் அல்ல! இந்த வேலையை எனது நிழலே நன்றாகச் செய்யுமே! -ப்ளூடார்க்

பறவைக்குக் கூடு; சிலந்திக்கு வலை; மனிதனுக்கு நட்பு! -வில்லியம் ப்ளேக்

உன்னைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் உன்னை நேசிப்பவனே உண்மை நண்பன்! -எல்பர்ட் ஹப்பார்ட்

நல்ல நண்பன் வேண்டுமா? முதலில் நீ நல்ல நண்பனாக மாறு! -ரால்ஃப் வால்டோ எமர்சன்

உண்மையான நண்பன், கடலில் தத்தளிக்கும் கப்பலுக்குக் கலங்கரை விளக்கம் போன்றவன்! -கியோடே டி பான்டோன்

இந்த உலகில் நட்பைவிட விலை மதிக்க முடியாதது ஒன்றுமில்லை! -தாமஸ் அக்வினாஸ்

எல்லோருக்கும் நண்பனாக இருப்பவன் ஒருவனுக்கும் உண்மையான நண்பனாக இருக்க முடியாது! -அரிஸ்டாட்டில்

ஒரு ரோஜா இருந்தாலும் என் தோட்டம் மணக்கும்; ஒரு நண்பன் இருந்தாலும் என் உலகம் மணக்கும்! -லியோ

மற்றவர்கள் செய்ய முடியாததைச் செய்வது திறமை: திறமையாலும் செய்ய முடியாததைச் செய்வது மேதைமை! -வில் ஹென்றி.

நாய் வாலை ஆட்டிப் பிழைக்கிறது; மனிதன் தலையை ஆட்டிப் பிழைக்கிறான். -யாரோ.

நம் செல்வத்தின் உண்மையான அளவு, எல்லாவற்றையும் நாம் இழந்த பிறகும் நமக்கு உள்ள மதிப்புதான். -ஜே.எச்.ஜோவெட்.

இன்று உங்களுக்குக் கிடைத்திருக்கிற ஒரு நாள் இருக்கிறதே, 
அது வாழ்க்கையில் நாளை வரப்போகும் இரண்டு நாட்களுக்குச் சமமானது
-பெஞ்சமின் ஃபிராங்க்ளின்.

ஒரு விஷயம் வேடிக்கையானதாக இருந்தால், அதன் ஆழத்தில் ஒளிந்திருக்கும் உண்மையைத் தேடிப் பாருங்கள் -பெர்னார்ட்ஷா.

அற்ப விஷயங்களை மறக்கத் தெரிந்திருப்பதே சிறந்த ஞாபகசக்தித் திறன்
-க்ளிஃப்டன் ஃபேடிமான்.

எந்த விஷயத்தைப் பற்றியும் மிகத் தெளிவாகத் தெரிந்தால் மட்டுமே மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க முயற்சிக்கலாம் -டைரன் எட்வர்ட்ஸ்.

ரகசியத்தை வெளியிடாமல் இருப்பது, காயத்தை மறக்காமல் இருப்பது மற்றும் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவழிப்பது ஆகிய மூன்றும் அவ்வளவு எளிதல்ல! -சிலான்.

நேற்று நான் புத்திசாலியாக இருந்தேன்; ஆனால் இன்று அப்படியில்லையே என்று நினைக்கத் துவங்கும்போதுதான் உண்மையிலேயே புத்திசாலியாகிறாய்! -ஒரு ஆலயத்தில் காணப்பட்ட வாசகம்.

உங்களால் நன்றாகச் செய்ய முடியும் என்கிற காரியத்தை, ஒரு போதும் பிறரிடம் கொடுத்து செய்யச் சொல்லாதீர்கள். -தாமஸ் ஜெஃபர்சன்.

நான் அறிந்து கொள்ள வேண்டியவற்றைத் தருபவை புத்தகங்களே! இதுவரை நான் படித்திராத புத்தகத்தைத் தருபவனே நல்ல நண்பன்! -ஆபிராகாம் லிங்கன்

உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் - தயவுசெய்து உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியைத் தூர எறிந்துவிட்டு, அது இருந்த இடத்தில் ஒரு புத்தக அலமாரியை வையுங்கள்! -ரோல்ட் தஹில்

உங்கள் குழந்தைகளின் உலகத்தை விரிந்து பரந்ததாக மாற்ற நிறைய வழிகள் இருந்தாலும் புத்தகங்களை நேசிக்கக் கற்றுக் கொடுப்பதுதான் தலை சிறந்த வழி! -ஜாக்குலின் கென்னடி

பழைய சட்டையை அணிந்து கொண்டிருந்தாலும் புதிய புத்தகங்களை வாங்க மறுக்காதே! -ஆஸ்டின் பெல்ப்ஸ்

உறைந்த பனியாக இருக்கும் உங்கள் உள்ளக் கடலை உடைத்து நீர்வெளியாக்கும் கோடரியே புத்தகம்! -ப்ரான்ஸ் காஃப்கா

நல்ல புத்தகங்களை படிக்க விரும்பாதவன் படிப்பறிவில்லாதவனுக்குச் சமம்! -மார்க் ட்வெய்ன்

பெரும் செல்வத்தைக் கொண்ட புதையல் தீவை விட மேலான செல்வம் நல்ல புத்தகங்களில் உள்ளது! -வால்ட் டிஸ்னி

புத்தகங்களை ஆர்வத்துடன் வாசிக்கக் கற்றுக் கொள்ளும்போதுதான் நீ முழுச் சுதந்திரம் பெற்றவனாகிறாய்! -ஃப்ரடெரிக் டக்ளஸ்

எனக்குத் தெரிந்த சொர்க்கம் நூலகம்தான்! -ஜார்ஜ் லூயி ஃபோர்கே

நீ படிக்க விரும்பும் புத்தகம் இன்னும் எழுதப்படவில்லையென்று நீ உணர்ந்தால், அத்தகைய புத்தகத்தை நீயே எழுத ஆரம்பித்துவிடு! -டோனி மாரிஸன்

விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...

வாழ்க  வையகம் வாழ்க வளமுடன்
அன்புடன் உங்கள் நண்பன் கே கே சுப்ரமணியன் [எ ]
சுபமனியன் ,வாழ்க வளமுடன்

http://www.facebook.com/k.ksubramanian

No comments:

Post a Comment