
"அவரவர் விருப்பம் போல செயல் புரியலாம்" என்ற எண்ணம் இந்த சமுதாயத்தில்
பலரிடம் உள்ளது. இது மிகத் தவறாகும்." 'இறையாற்றல்' எல்லா இடங்களிலும்,
எல்லாப் பொருட்களிலும் எல்லா உயிர்களிடத்திலும் நீக்கமற நிறைந்து உள்ளது.
ஒவ்வொருவருக்குள்ளும் 'இறையாற்றலே' (The Source of all the Forces, Static
State) இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒருவர் மற்றவருக்குத் துன்பம் செய்தால்
அத்துன்பம் யாருக்குப் போய்ச் சேரும்? யார் எதைச் செய்தாலும் அப்படியே
கருமையத்தில் (Genetic center) சுருக்கி வைத்திருந்து செய்தவருக்கே
காலத்தோடு திருப்பிக் கொடுக்கிறது. எங்கிருந்து அத்துன்பம் புறப்பட்டதோ
அங்கேயே விளைவாகத் திரும்பி வருகிறது.
எல்லாம் வல்ல இறைநிலை (The Law of Nature) அவரவர்கள் வினைக்குத் (Sins and Imprints) தகுந்தவாறு விளைவைப் பொருத்தி வைக்கிறது. அவரவர் செயலாலேயே அவரவர்க்கு உடல் நோயோ, மனநோயோ உண்டாகின்றன. அதன் காரணமாக இன்பமோ, துன்பமோ , இலாபமோ, வெற்றியோ விளைகின்றன.
சமுதாயத்தால் (Human Society) உருவாக்கப்பட்டு காக்கப் பெறும் மனிதன் மற்றவர்களுடைய தேவைக்கும் , விருப்பத்துக்கும், அறிவிற்கும், மதிப்பளித்து தனது வாழ்வை நடத்தவேண்டியது கடமையாகும். அதற்காக தமது செயல்களைப் பிறர்க்குத் தீமை தராத முறையில் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
........................"தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி".
*************************************************
பிறர் செயலில் அவசியமின்றிக் குறுக்கிட வேண்டாம் :

"என் ஆசை சீரமைத்து இவற்றைச் செய்வேன்
என ஊக்கம் கொண்டாற்றல் உகந்ததாகும்.
உன் ஆசை இன்ன இன்ன வேண்டா மென்று
உருப்போட்டுப் பிறரை நீ யடக்க வென்றால்
நன்றாக விளங்குவதென் உன் செல்வாக்கை
நலிந்தவ ரென்றெண்ணிப் பிறர்மேலே ஏவும்
தன்முனைப்பே தற்புகழ்ச்சி சினம் பொறாமை
தவறு பலவும் விளையும் தருக்கு வேண்டாம்."
நற்றவத்தால் தொண்டாற்றி நலம் விளைப்போம்:-
"கற்ற கல்வியால் மனிதன் பயனை முற்றும்
காணவெனில் தன் உயிரை உணரத்தக்க
நெற்றிக்கண் ஆசானால் திறக்கப் பெற்று
நிலையாது சுழலுமனம் உள்ளொடுங்கிப்
பற்றற்ற நிலை வரையில் பழக வேண்டும்;
பதிபசு பாசம் நிலைகள் விளக்கமாகும்
நற்றவத்தால் வாழ்வு வளம் பெருகத் துய்த்து
நாட்டுக்கும் தொண்டாற்றி நலம் விளைப்போம்."
எல்லாம் வல்ல இறைநிலை (The Law of Nature) அவரவர்கள் வினைக்குத் (Sins and Imprints) தகுந்தவாறு விளைவைப் பொருத்தி வைக்கிறது. அவரவர் செயலாலேயே அவரவர்க்கு உடல் நோயோ, மனநோயோ உண்டாகின்றன. அதன் காரணமாக இன்பமோ, துன்பமோ , இலாபமோ, வெற்றியோ விளைகின்றன.
சமுதாயத்தால் (Human Society) உருவாக்கப்பட்டு காக்கப் பெறும் மனிதன் மற்றவர்களுடைய தேவைக்கும் , விருப்பத்துக்கும், அறிவிற்கும், மதிப்பளித்து தனது வாழ்வை நடத்தவேண்டியது கடமையாகும். அதற்காக தமது செயல்களைப் பிறர்க்குத் தீமை தராத முறையில் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
........................"தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி".
**************************
பிறர் செயலில் அவசியமின்றிக் குறுக்கிட வேண்டாம் :

"என் ஆசை சீரமைத்து இவற்றைச் செய்வேன்
என ஊக்கம் கொண்டாற்றல் உகந்ததாகும்.
உன் ஆசை இன்ன இன்ன வேண்டா மென்று
உருப்போட்டுப் பிறரை நீ யடக்க வென்றால்
நன்றாக விளங்குவதென் உன் செல்வாக்கை
நலிந்தவ ரென்றெண்ணிப் பிறர்மேலே ஏவும்
தன்முனைப்பே தற்புகழ்ச்சி சினம் பொறாமை
தவறு பலவும் விளையும் தருக்கு வேண்டாம்."
நற்றவத்தால் தொண்டாற்றி நலம் விளைப்போம்:-
"கற்ற கல்வியால் மனிதன் பயனை முற்றும்
காணவெனில் தன் உயிரை உணரத்தக்க
நெற்றிக்கண் ஆசானால் திறக்கப் பெற்று
நிலையாது சுழலுமனம் உள்ளொடுங்கிப்
பற்றற்ற நிலை வரையில் பழக வேண்டும்;
பதிபசு பாசம் நிலைகள் விளக்கமாகும்
நற்றவத்தால் வாழ்வு வளம் பெருகத் துய்த்து
நாட்டுக்கும் தொண்டாற்றி நலம் விளைப்போம்."
............"தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment